மடலேறுதல்

 மடலேறுதல்

மடலேறுதல் , மடல் என்றால் பனைமரத்தின் ஓலை , மா என்றால் குதிரை , ஏறுதல் என்பது


பனை ஓலையால் குதிரை செய்து அதன் மீது ஏறுதல் என்பதாகும் , இது சங்க காலத்தில் இருந்த வழக்கம் . எப்படி ....?



காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன்ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக்கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து (சிறுவர்களை இழுக்க செய்வான்காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும்இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறதுஎனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டுகாமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டுபெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லைஎன்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை.  


திருக்குறளில்:- 

அதிகாரம்நாணுத்துறவு உரைத்தல் 

குறள் எண்:1137

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் 

பெண்ணின் பெருந்தக்கது இல்


சாலமன் பாப்பையா விளக்கம்:

கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண்பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.


குறள் எண்:1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.”


சாலமன் பாப்பையா விளக்கம்:

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.


குறள் எண்:1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்


சாலமன் பாப்பையா விளக்கம்:

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.


                                                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



தமிழி எழுத்துக்கள் உள்ள பானை ஓடுகள் தமிழகத்திற்கு வெளியே கிடைத்த இடங்கள்

தமிழி எழுத்துக்கள் உள்ள பானை ஓடுகள் தமிழகத்திற்கு வெளியே கிடைத்த இடங்கள்:- 



  • ஓமனில் கிடைத்த தமிழி ஓடு:- ஓமன் நாட்டில் “கோர் ரோரி” என்னுமிடத்தில் கிடைந்த தமிழி பொறித்த ஓடுபண்டைய கடல் வணிகத்தின் சிறப்பைக் காட்டுகிறதுஇத்தாலிய தொல்லியலாளர்களால் 2006ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதுசங்க காலத்தில் பயிலப்படும் ‘அந்தை’, ‘கொற்றந்தை’, ‘கீரன்’ என்னும் மெயர் சொற்கள் இவ்வோட்டில் உள்ளது.

ந்தைகீன்


என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.


இவை தமிழ் பண்பாடு வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை


  • எகிப்தில் “கரீர் அல் கடீம்-Quseir-al-Qadim” என்ற இடத்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதுஅதில் "பானை உரி” என்று எழுதப்பட்டிருந்ததுநாழி என்பது ஒருபடியையும்உரி என்பது அரைப்படியையும் குறிக்கும்எனவே அது அரைப்படி அளக்கும் பானை என்று தெரிகிறதுஇதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன


  • தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன



https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Indus-like-inscription-on-South-Indian-pottery-from-Thailand/article16364751.ece/amp/


               🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



சேரமான் கணைக்கால் இரும்பொறை

 சேரமான் கணைக்கால் இரும்பொறை





சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன்இவன் சோழன் செங்கணான் என்ற மன்னனோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன்சிறையில் அடைப்பட்டிருக்கையில் மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்குமாறு காவலாளிகளிடம் கேட்கும்பொழுது காவலாளிகள் அம்மன்னன் மனம் புண்படும்படி இழிவுபடுத்தி ஒரு மன்னன் என்று கூட பாராமல் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள்தாகத்துக்கு தண்ணீர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் மன்னன் மிகவும் மனம் வருந்திதந்த நீரைக்குடியாது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஒரு செய்யுளை எழுதி விட்டு உயிர் நீத்தான்.


சேரமான் கணைக்கால் இரும்பொறை மனம் நொந்தி எழுதிய செய்யுள் புறநானூற்றின் 74வது பாடலாக உள்ளது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளில் தப்பார்

தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேள் அல் கேளிர் வேளாண் இடர்ப்படுத்து சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் உலகத்தானே?”

 

பொருள்:

பிள்ளை இறந்து பிறந்தாலும்உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அல்ல என்று பழந்தமிழர் கருதமாட்டார்கள்மாறாக அவற்றையும் வாளால் கீறி வடுப்படுத்தியே அடக்கம் செய்தனர்ஏனென்றால் ஆணும் போர்க்களத்தில் விழுப்புண் பட்டே இறக்க வேண்டும் என்பது அவர்தம் ஆசையாக இருந்ததுதமிழர் மரபு இவ்வாறு இருக்கஒரு அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால்வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனைசங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான்அத்தகைய மனிதம் இல்லாத பகைவர்வயிற்றில் தீ போல இருக்கும் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் உடனே தந்துவிடுவார்களா? காலம் தாழ்த்தி அவர்கள் தரும் தண்ணீரைக்குடித்து இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட உயிர் விடுவது எவ்வளவோ மேல்.


                                                🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று பொருள்இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும்ஆனால் இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றனஎப்படியோ ஒரு வெண்பா வந்து சேர்ந்துவிட்டதுவெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின் அதைப் பஃறொடை வெண்பா என்பர்இந்நூலில் பஃறொடை வெண்பாக்களும் இருக்கின்றனபஃறொடை-பல்தொடைபல அடிகள் தொடர்ந்திருப்பவை.


களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு

  1. உழவர்கள் நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டுவந்து சேர்த்துஅடித்துநெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று
  2. நால்வகைப் படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க்களத்தைப் பாடுவது மற்றொன்று


ஏர்க்களம்போர்க்களம் இந்த இரண்டைப் பற்றியும் பாடும் பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்தக் களவழி நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது.


                                                🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏