அறவிலை வணிகன் ஆய் அலன்!
புறநானூறு 134
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் வேளிர் ‘அண்டிரன்’
காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே.”
விளக்கம்:-
இந்தப் பிறவியில் பிறருக்கு நலன் செய்தால், மேல் உலகில் அல்லது மறுபிறவியில் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நன்மை செய்யும் "வணிகன் அல்ல நான்". நன்மை செய்வதே எமது அறம். இதுவே, சான்றோர் கடைப்பிடித்த வழி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment