மணிமேகலை கூறும் பேதைமை:-
“ பேதைமை என்பது யாதென வினவின்
ஒதிய இவற்றை உணரா மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல்”
விளக்கம்:-
பேதைமை என்பது அறியாமை. அதாவது, உண்மையை உணராமல் அதன் இயல்புகளை அறியாமல் மயங்குதல். இயற்கையாக உள்ளனவற்றிலும் கண்டதை மறுத்து, முயலுக்குக் கொம்பு உண்டெனப் பிறர் கூறும் பொய்களை மெய்யென நம்புதல்
அய்யன் கூறும் பேதைமை:-
குறள் 834:-
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்”
சாலமன் பாப்பையா விளக்கம்:
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment