#படித்ததில் பிடித்தது
அறச்சலூர் இசைக்கல்வெட்டு
"தமிழின் மிகத் தொன்மையான இசைக்கல்வெட்டு இதுவே" ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது.
இக்கல்வெட்டில் த-தை-தை என்பன போன்ற இசையமைதிகளுக்கான குறிப்புகள் (ஸ்வரங்கள்) உள்ளதாக இம்மலையின் முன்புறமுள்ள பலகை கூறுகிறது.
சமணர்களின் படுக்கையாகவும் இங்குள்ள குகை இருந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்ட உணவுத் தட்டும் குவளையும் இங்குள்ளது.
எழுத்தும் புணருத்தான் மணிய வண்ணக்கன் சாத்தன் என்று எழுதப்பட்ட கல்வெட்டும் ஓரிணை மாந்தரின் ஆடற்காட்சியுள்ள பாறைச் சித்திரமும் எழுதப்பட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் வாழ்க
No comments:
Post a Comment