புத்தகம்: தேசாந்திரி. ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

புத்தகம்: தேசாந்திரி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்



உலகின் முதற்பயணி சூரியனே. அது முடிவில்லாமல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. பயணமே மனிதர்களை மாற்றுகிறது. சைபீரியாவில் இருந்து பறந்து வரும் நாரைகள் வேடந்தாங்கலில் தங்கி இனத்தை விருத்தி செய்கின்றன. பறவைகள் தன் இனத்தை விருத்தி செய்யப் பறந்து வருவது போல நாம் அறிவையும் அனுபவத்தையும் விரிவு செய்யப் பயணம் செய்ய வேண்டும். 

பயணத்தில் நாம் புதிது புதிதாக அனுபவங்களைப் பெறுகிறோம். புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. உலகைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்கள் உருமாறத் துவங்குகின்றன. காணும் இடங்களை வியப்பதுடன் சிறகடித்து அகன்ற வானில் பறக்க துவங்குகிறோம். 

பயணம் என்பது வெறுமனே ஓரிடம் விட்டு ஒரிடம் செல்வதில்லை . நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளை திறந்துவிடுவதே பயணம். 

எந்த வசதியும் இல்லாத காலத்திலே மனிதர்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். கடல்வழிகளைக் கண்டறிந் திருக்கிறார்கள். நட்சத்திரங்களைத் துணையாகக் கொண்டு நடந்திருக்கிறார்கள். இன்று எல்லா வசதிகளும் வந்துவிட்டன. ஆனால் பயணம் போகிற மனநிலை பலருக்கும் வாய்க்கவில்லை. ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பயணத்தில் கண்ட காட்சிகளை, மனிதர்களை அனுபவத்தையே இந்தக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். இந்த உலகத்தில் ரசிப்பதற்கும் , சுற்றி பார்ப்பதற்கும் என்ன இருக்கிறது ?? இயற்கை என்றால் என்ன?  பயணம் என்றால் என்ன போன்ற தேடல்களின் விடை தான் இப்புத்தகம். 

சூரியன் , மழை , குளிர் , மலை , கிணறு , ஆறு , அருவி , கல்லு , மண்ணு , பறவைகள் , பூக்கள் , மரங்கள் , மேகம் , கடல் , உப்பு என்று நாம் கண்டு கொள்ளாத , கருத்தில் கொள்ளாத , ரசிக்க மறந்த அத்துனை இயற்கை அம்சங்களை பற்றியும் தனிதனியாக விவரிக்கிறார் . 

படிக்க படிக்க , ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் நம் கையை பிடித்து அவருடன் நம்மையும் கூட்டி செல்வது போல் ஓர் உணர்வு. இந்த தேசாந்திரியை கையில் எடுத்ததால் சிறிது நேரம் நாமும் மாறி விடுகிறோம் தேசாந்திரியாய் ❤️🎉🎊

                 🙏🙏🙏🙏🙏🙏🙏


தமிழி் கல்வெட்டு் - மதுரை



 தமிழி் கல்வெட்டு் - மதுரை பயணத்தில் 

👉 மாங்குளம்
 
👉 அரிட்டாபட்டி
 
👉 கருங்காலக்குடி் மற்றும் 
 
👉 கீழவளவு  
ஆகிய இடங்களில் உள்ள தமிழி கல்வெட்டுகளை பார்வையிட்டோம் ❤️❤️❤️


மாங்குளம்:-  


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ளது மாங்குளம்இங்குள்ள கிமு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி” கல்வெட்டுக்கள் 1882ல் ராபர்ட் சீவல் (Robert_Sewellஎன்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுமாங்குளத்தில் மொத்தம் 6 தமிழி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.





👉 தமிழி கல்வெட்டு் 1:-

   𑀓𑀡𑀺𑀬𑁆       𑀦𑀢𑁆𑀢𑀺𑀬𑁆         𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑁆           𑀅𑀯𑀷𑁆

“கணிய் நந்திய் கொடிய் அவன்”

விளக்கம்:-

          (பின்வரும் நீண்ட கல்வெட்டை 2) “கணி நத்தி” என்பவன் பொறித்துக் கொடுத்துள்ளான்.




  

👉தமிழி கல்வெட்டு 2:-

     கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்

       இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்

       வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

விளக்கம்:

      கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின்” அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை (கற்படுக்கையைஉருவாக்கிக் கொடுத்தான்.



𑀓𑀡𑀺𑀬𑁆(கணிய்) 𑀦𑀦𑁆𑀢𑀸 (நந்த) 𑀅𑀲𑀭𑀺𑀬𑁆𑀇 (அஸரிய்இ) 𑀓𑀼𑀯𑁆 (குவ்) 𑀅𑀷𑁆𑀓𑁂 (அன்கே) 𑀢𑀫𑁆𑀫𑀫𑁆 (தம்மம்) 𑀇𑀢𑁆𑀢𑀸𑀅 (இத்தாஅ) 𑀦𑁂𑁆𑀝𑀼𑀜𑁆𑀘𑀵𑀺𑀬𑀷𑁆 (நெடுஞ்சழியன்) 𑀧𑀡𑀅𑀷𑁆 (பணஅன்) 𑀓𑀝𑀮𑁆𑀅𑀷𑁆 (கடல்அன்) 𑀯𑀵𑀼𑀢𑁆𑀢𑀺𑀬𑁆 (வழுத்திய்) 𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀼𑀧𑀺𑀢𑁆𑀢𑀅 (கொட்டுபித்தஅ ) 𑀧𑀴𑀺𑀇𑀬𑁆 (பளிஇய்)



👉தமிழி கல்வெட்டு 3:-

                         சந்திரிதன் கொடுபித்தோன்

விளக்கம்:

     இந்த உறைவிடத்தை சந்தரிதன் என்பவன் அமைத்துக் கொடுத்தான்





👉தமிழி கல்வெட்டு 4:-

                       வெள்அறை நிகமதோர் கொடிஓர்

விளக்கம்:-      இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள “வணிகக் குழுக்கள்” ஆவர்.


👉 தமிழி கல்வெட்டு 5:-

      கணிஇ நதஸிரிய் குவ…. வெள் அறைய் நிகமது காவிதிஇய்

     காழிதிக அந்தை அஸூதன் பிணஉ கொடுபிதோன்

விளக்கம்:-

 கணி நந்தஶ்ரீ குவ(ன்என்பவருக்கு வெள்ளறை என்ற கிராமத்தைச் சார்ந்த உழவு சம்பந்தமான வணிகம் செய்யும்காழிதிக அந்தை அஸூதன் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தான்




👉தமிழி கல்வெட்டு 6:-

     கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்

ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

விளக்கம்:-

கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் சகலையான இளஞ்சடிகன் என்பவனின் தந்தை சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (உறைவிடத்தைஅமைத்துக் கொடுத்தான்.


அரிட்டாபட்டி:-


 சமண தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான “நேமிநாதர்” என்பவருக்கு “அரிட்டநேமி” என்ற பெயர் இருந்ததனால் ‘அரிட்டாபட்டி’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்


அரிட்டாபட்டியில்

👉 கி.மு 3-2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த “தமிழி” கல்வெட்டுகள் உள்ளன


👉 தமிழி கல்வெட்டு:-

    1. “நெல்வெளி இயசிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்

    2. “இலஞ்கிய எளம்பேராதன் மகன் எமயவன் இவ்முழுஉகை கொடுபிதவன்


விளக்கம்:-          1. திருநெல்வேலியைச் சேர்ந்த செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த சமணப்பள்ளி

  2. இலஞ்சியைச் சேர்ந்த இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை.

என்று கி.மு 3-2ஆம் நூற்றாண்டின் “தமிழி” கல்வெட்டு கூறுகிறது


👉 சமண புடைப்பு சிற்றங்கள் உள்ளன

👉 கிபி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் மற்றும் குடைவரை கோவில்களும் உள்ளது.

👉கிபி 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘வட்டேழுத்து’ கல்வெட்டுகள் உள்ளன

👉 அரிட்டாபட்டி பகுதி தற்போது தமிழ்நாட்டின் “முதல் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக” Nov’22யில் தமிழக அரசுஅறிவித்துள்ளது.❤️🙏


கருங்காலக்குடி:-

              மதுரை திருச்சி புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஊர் கருங்காலக்குடிஇங்குள்ள “தமிழி” கல்வெட்டு கி.பி. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது


👉>5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும்

👉 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும்

👉 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடிதொன்மையின் சின்னமாக விளங்குகிறது.

👉தமிழி கல்வெட்டு:-

      ஏழையூர் அரிதின் பளிய்

விளக்கம்:

        ஏழையூர் எனும் ஊரைச்சேர்ந்த அரிதி என்பவர் இப்பள்ளியை அமைத்துக் கொடுத்தவர் என்பது இதன்பொருளாகும்.

👉 பாறையின் மற்றொரு பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த “பாறை ஓவியங்களும்” கண்டறியப்பட்டுள்ளன.









கீழவளவு:-

        மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கீழவளவு எனும் ஊர் அமைந்துள்ளது

👉 இங்கு கிமு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுக்களையும் 

👉 கி.பி 9- 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பங்களையும் உள்ளன.


தமிழி கல்வெட்டு:-

        உப(அன் தொண்டி(வோன் கொடு பளிஇ

விளக்கம்:

         உபாசன் தொண்டி இலவோன் கொடுத்த பள்ளி என்பது இக்கல்வெட்டின் பொருள்இடவலமாக வெட்டப்பட்டகல்வெட்டு.





                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏