தஞ்சை கோவில் கட்டிய யார் என்று கண்டுபிடித்தவர்??!!



 சராசரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது யார் என்று கேட்டால் அப்பொழுது வாழ்ந்த மக்கள் சொல்கின்ற பதில் என்னவென்றால் “இக்கோவிலைக் கட்டியது ‘காடுவெட்டி சோழன்’ என்ற மன்னன்அவன் காட்டை அழித்து இங்குள்ள கோவிலைக் கட்டினான் என்று தான் சொல்வார்கள்எவரும் ராஜராஜன் என்ற மன்னன்தான் கட்டினான் என்பதையே அரியாமல் இருந்தனர்எவருக்கும் அக்கோவில் உள்ள கல்வெட்டை படித்ததும் இல்லைபுராணங்கள் என்ற பெயரில் வைதிக மதம் விடும் கட்டுக் கதைளை மட்டும் நம்பி இருந்தனர்.


இக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்ற உண்மையை “ஹல்ட்ஸ்Eugen Julius Theodor Hultzsch என்ற ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கல்வெட்டுகள் தமிழில் இருப்பதை கண்டுபிடித்தார்அவர் அதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செய்தார்அவர்தான்தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி பல நாட்கள் ஆராய்ச்சி செய்து இந்த மாபெரும் அதிசயத்தைதமிழர்களின் இந்த வரலாற்று சின்னத்தை கட்டியது ஒரு தமிழன் என்றும்அவர்தான் ராஜராஜ சோழன் என்று இந்த உலகிற்கு கூறினார்.

தென்னிந்தியக் கல்வெட்டியல் தொகுதியை முதலில் வெளியிட்டவரும் இவரே.


கி.பி 2ஆம் நூற்றாண்டு மாங்குளம் தமிழ் பிராமிமாமல்லபுரம் கல்வெட்டுக்கள் , பராந்தக சோழன் முதலாம் உத்திரமேரூர் கல்வெட்டுகள் (கிபி 907_955), தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ‘ஹல்ட்ஸும்’ அவரது உதவியாளரான ‘வெங்கய்யாவும்’ கண்டுபிடித்தனர்


https://www.sahapedia.org/interview-tn-ramachandran

திருவிந்தளூர் செப்பேடு

 திருவிந்தளூர் செப்பேடு:-


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் “திருவிந்தளூர்”. இதன் அருகில் உள்ள ‘கழுதண்ணி முட்டம்’ என்ற பகுதியில் கைலாசநாதர் கோவில் என்ற பெயரிலான சிவன்கோவில் உள்ளது. கட்டிட வேலைக்காக இக்கோவில் வளாகத்தில் நிலத்தைத் தோண்டும்போது ஒரு தொகுப்பாக செம்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட 86 செப்பேடுகள் கிடைத்தன. முதல் பக்கம் மட்டும் கிடைக்கவில்லை. செப்பேடுகள் சேர்க்கப் பட்ட வளையத்தில் உள்ள வட்டவடிவ முத்திரையில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் “இராஜேந்திரதேவன்” வழங்கிய கொடை என்ற எழுத்துப் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு செப்பேடும், சராசரி 44 செ.மீ. நீளமும் 21 செ.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. செப்பேடுகள், இணைப்பு வளையம், வளையத்தின் மீதான முத்திரை எல்லாம் சேர்த்து ஏறத்தாழ 150 கிலோ கிராம் எடையுள்ளது. இவ் வகையில் பெரிய அளவிலான செப்பேடுகளில் ஒன்றாக இது அமைகிறது.

இருபுறமும் எழுத்துப்பொறிப்புடைய இச்செப்பேடு 3710 வரிகளைக் கொண்டு இதுவரை, கிடைத்துள்ள செப்பேடுகளுள் அளவில் பெரியதாக அமைகிறது.

செப்பேட்டுச் செய்தி:-

👉 கி.பி.1053-56 ஆண்டுகளில் பழைய பிராமணக் குடியிருப்புகளில் இருந்து அழைத்துவரப்பட்ட ஏறத்தாழ “660 பிராமணர்களைக் குடியேற்றி புதிதாக உருவாக்கப்பட்ட பிரமதேயக் குடியிருப்பை” இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

👉 செப்பேட்டின் தொடக்கத்தில் வடமொழியில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்திப் பகுதி நீங்கலாக எஞ்சிய பகுதிகள் தமிழில் அமைந்துள்ளன.

👉 இப்புதிய பிரமதேயக் குடியிருப்பில் குடியேற்றப்பட்ட பிராமணர்கள் பெற்ற பொருளியல் நலன்களையும், பண்பாட்டு உரிமைகளையும் (மாடிவைத்து வீடுகட்டல், ஓடுவேய்தல் போன்றவை) நீர்மேலாண்மை உரிமையையும் இச்செப்பேடு குறிப்பிடுகிறது.


அவதானிப்புகள்:- 

இச்செப்பேட்டை ஆய்வு செய்து பின்வரும் செய்திகளை எ. சுப்பராயலு அய்யா அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்.

👉 அரசுக்கு வரியாக வரவேண்டிய 80,000 கலம் நெல் இங்குக் குடியேற்றப்பட்ட பிராமணர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

👉அத்துடன் நிலத்தின் உரிமையாளர்கள் என்ற முறையில் குடியானவர்களிடம் இருந்து குத்தகைப் பங்கையும் பெற்றுள்ளார்கள்.

👉 இப்பிரமதேயம் உருவாக்கப்படும் முன்னர் நில உரிமையாளர்களாய் இருந்தோரின் ‘நிலஉரிமை பறிக்கப்பட்டு’ அது பிரமதேயக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பொருட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பதில் தெளிவில்லை


Reference:-

http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec16/32040-2016-12-14-16-34-01?fbclid=IwAR1LOZV6JlQiBkvSPjyJG6IL8ecG5GHabxmO_5aR3l_QBQXgHyeJBHK2n9g


குறுந்தொகை-136 - காமம்

 குறுந்தொகை-136



குறிஞ்சி


'காமம் காமம்என்பகாமம்

அணங்கும் பிணியும் அன்றேநுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றேயானை

குளகு மென்று ஆள் மதம் போலப்

பாணியும் உடைத்துஅது காணுநர்ப் பெறின

- மிளைப்பெருங் கந்தனார்.


காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்

காமம் - அக்காமமானது;

அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும்

பிணியும் அன்று - நோயும் அன்று

நுணங்கி - நுண்ணிதாகி;

கடுத்தலும் - மிகுதலும்;

தணிதலும் - குறைதலும்;

இன்று - இலது;

யானை---, குளகு மென்று ஆள் மதம் போல தழை உணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல;

அது காணுநர் பெறின் - கண்டு மகிழ்வாரைப் பெற்றால்;

பாணியும் உடைத்து - அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.


கருத்து

இகாமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏