சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
ஆர். பாலகிருஷ்ணன் தமிழ் இலக்கிய மாணவர். கடந்த 30 ஆண்டுகளாக, இடப்பெயர் ஆய்வுகளைச் செய்துவருபவர்.1984ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக முழுவதுமாக தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் வாழ்ந்தவர்கள் தமிழ் தொல்குடிகளே என்று அவருடைய ஆய்வு “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
மக்களை மையத்தில் வைக்காத வரலாறு; மன்னர்கள் பிறந்த கதை, வளர்த்த கதை, இறந்த கதைதான் மட்டும்தான் பேசும். மன்னர்கள் கட்டிய கோவில்களை சுற்றி சுற்றி வந்து பெருமை பேசும். அரண்மனைகளையும், அந்தப்புரத்தையும் மட்டுமே துருவி, துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும். சாதி மத வெறியை தூண்டும் வரலாற்றை (திரித்து கூறி) முன்னிலை படுத்தும்.
நாம் ஆராய்வதோ அல்லது மீட்டேடுக்கவேண்டியது மன்னனின் கதையையோ அல்லது அவன் கட்டிய கோவிலையோ அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை முச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியை காலத்தை வென்று நிற்கும் மனிதர்களின் வரலாற்றை.
தமிழ் மொழியை ஒரு மாவட்ட மொழியாய், ஒரு மாநில மொழியாய் சுருக்கிவிடாமல், ஓர் உயர் நாகரிகத்தின் மொழியாய் உயர்த்தி பிடிக்கும் பக்குவம் மிக்க வரலாற்று ஆய்வாளர்கள் வேண்டும்.
திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழி ‘தமிழ்’. திராவிடம் என்ற சொல்லே ‘தமிழ்-திரமிளம்-திராவிடம்’ எனத் திரிந்து உருவானதுதான்.
தமிழர்களின் தோற்றம் குறித்து உலக அளவில் நான்கு விதமான கொள்கைகள் உண்டு.
- கனகசபை பிள்ளை முன்வைத்த மங்கோலிய கொள்கை. (இவர் ஆங்கிலத்தில் எழுதிய The Tamils 1800 Years Ago என்னும் நூல் புகழ் பெற்றது.)
- எமன்டர்ப் என்ற அறிஞருடைய இரும்புகால கொள்கை (கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் - Christoph von Fürer-Haimendorf)
- கில்பர்ட் ஸ்லடெர் (GilbertSlater), மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் முன்வைத்த ‘லெமூரியா’ கொள்கை
- அறிவியல் ஆராய்ச்சிகளால் உருவான ‘சிந்துசமவெளிக் கொள்கை’
ஹரப்பா நாகரிகம் பின்வருமாறு பிடிக்கப்பட்டுள்ளது
தொடக்க ஹரப்பா - கிமு 3300 - 2600
முதிர்ந்த ஹரப்பா - கிமு 2600 - 1900
பிந்தைய ஹரப்பா - கிமு 1900-1700
கிமு 1900 இருந்து சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சி பெறத் துவங்கியது. ஹரப்பாவின் கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்த ‘ரிக் வேதம்’ குறிப்பிடுகிறது (அரியூப்பியா (Hariyupiya) என ரிக் வேதத்தில் குறிப்பிடும் இடமான ஹரப்பா(Harappa)). ஆப்கானிஸ்தான் நாட்டில் திராவிட மொழிகளில் ஒன்றான ‘பிராகியி’ மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர். அங்கும் செஞ்சி, ஆலூர் போன்ற பெயர்கள் இன்னும் ஊர்கள் உள்ளன.
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் வேறு வேறல்ல என்பது இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.
திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் என்றழைக்கிறார் கமில் சுவலபில் KamilZvelebil. திராவிடர்கள் சற்றேறக்குறைய கிமு 4000 வாக்கில் வடகிழக்கு ஈரானிலுள்ள கரடுமுரடான மலைப்பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்றும், சிந்துவெளிப் பண்பாட்டின் கட்டமைப்பில் திராவிடர்கள் என்று மதிப்பிடுகிறார் Kamil Zvelebil (தமிழர்களின் முழுமுதற்கடவுளான முருகன், மலையும் மலைசார்ந்த நிலமான குறிஞ்சி நிலக் கடவுள்).
சிந்துவெளி மக்கள் புலம் பெயர்ந்துபோது தங்களின் ஊர்பெயர்களையும் மீள்நினைவாக எடுத்துச் சென்று தங்களின் புதிய தாயகங்களில் மீண்டும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
யூதர்கள் தாங்கள் புலம் பெயர்ந்து சென்ற இடங்களுக்கெல்லாம் தங்களது முந்தைய ஊர்ப்பெயர்களைக் கொண்டுசென்றதையும் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வந்த பார்சி மக்கள் ஈரான் நாட்டு இடப்பெயர்களை கொண்டுவந்ததையும் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஐரோப்பிய இடப்பெயர்களை அமெரிக்காவில் பயன்படுத்தியதையும் இங்கே நினைவுகூரலாம்.
தமிழ்நாட்டு இடம்பெயர்களுக்கும் சிந்துவெளி உள்ள இடங்களின் இடப்பெயர்களும் இடையே வியப்பூட்டும் ஒற்றுமை காணப்படுகிறது என்று இந்த நூல் சான்றுடன் நிரூபிக்கிறது.

இடப்பெயர்கள் சாகா வரம் பெற்றவை அவை நினைவுக்கு எட்டாத பழைய காலங்களின் மொழியியல் தொல் எச்சங்கள்(fossilised representation of the immemorial past). தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள ஊர் பெயர்களான ஆமூர், ஆரணி, கஞ்சூர், கள்ளூர், காலூர், கொற்கை, மைலம், மானூர், நாகல், நள்ளி, பாசூர், தள்ளி, தொண்டி, ஊரல், கண்டிகை, ஆலூர், ஆசூர், படூர், செஞ்சி, மதிரை, வஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதிகளில் உள்ளது. (இது முழும்பட்டியல் அல்ல) . “மேல்-கீழ்” என்ற கருதுகோள் எவ்வாறு திராவிட பாரம்பரியத்தில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் மக்களிடையே பண்பாட்டு ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நூலில் ஆசிரியர் அளித்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கும்போது ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடிகின்றது. இடப்பெயர், மேல்-மேற்கு கீழ்-கிழக்கு, கோழிச்சண்டை மரபு என பண்பாட்டுத் தொடர்ச்சிகளை மையப்படுத்தி சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடப் பண்பாட்டைக் கட்டமைக்க இந்த நூல் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஆய்வுலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பு ஆகும்; எனவே இது ஒரு நகர நாகரிகம் ஆகும். சங்க இலக்கியங்களான ‘மதுரைக்காஞ்சி’,‘பட்டினப்பாலை’ ஓர் உன்னதமான நகர நாகரிகம் சித்தரிக்கப்படுகிறது. சங்க இலக்கிய காலம் என்பது சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்ட காலம்தான். அதிலுள்ள மீள் நினைவுகளின் தொன்மையை ஆய்வுலகம் உரிய அக்கறையோடு மதிக்கப்படவில்லை. “கொற்கை, வஞ்சி, தொண்டி” (KVT Complex) என்ற கருதுகோளுக்கு கீழடி வலுச்சேர்ப்பதும், வைகைக்கரைப் பண்பாடு என்ற நகர நாகரிகத்திற்கும், சிந்துவெளி என்ற நகர நாகரிகத்திற்கும் வேர்நிலைத் தொடர்பை மதிப்பிட இடப்பெயர் ஆய்வு உதவுகிறது.
சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் “ஸ்டெப்பி புல்வெளி” மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை. பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதியகற்கால) ஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. “இந்தியாவின் நாகரிகம் வேத நாகரிகமே” என நிறுவ முயலும் இந்துத்துவ கும்பலுக்கு, தற்போது வெளியாகியுள்ள சிந்து சமவெளி மக்களின் மரபணு சோதனைகள் செவிட்டிலறைந்தாற் போல் பதிலளிக்கின்றன. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் வேத நாகரீகம் அல்ல என்பது தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏