வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர் எது?!

வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர்


குஷிம் (Kushim)


மெசொப்பொத்தேமியாவில் (Mesopotamia) உள்ள உரூக் (uruk) என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த களிமண் பலகைகள் (Clay tablets) குறிப்பிடப்பட்டுள்ள பெயர்தான் வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர். 





இந்த பெயர் ஒரு தனிநபரின் பெயரா அல்லது அலுவலக உரிமையாளரின் பெயரா அல்லது பொதுவான தலைப்பு அல்லது ஒரு நிறுவனத்தைக் குறிக்கிறதா என்பது நிச்சயமற்றது.


ஆனால் இந்தப் பெயர் சுமார் கிமு 3000 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட களிமண் பலகைகளில் பொறிப்பட்டுள்ளது. அதில் "29,086 அளவு பார்லி 37 மாதங்கள் குஷிம்" என்று எழுதப்பட்டுள்ளது. இதை "குஷிம்" என்பவர்கை யெழுத்திட்டதாக விளக்கலாம்.


வரலாற்றில் நமக்குத் தெரிந்த முதல் நபரின் பெயர் ஒரு ராஜாவோ அல்லது ஒரு போர்வீரனோ அல்லது ஒருவேளை பிரபல அறிஞரோ அல்லது கடவுளின் பெயரோ அல்ல..இந்த  குஷிம் என்பவர் ஒரு கணக்காளர் (accountant) என்பது மட்டும் தெளிவு. 

கு-ஷிம் (KUS-HIM)



7,000 ஆண்டுகளுக்கு மேலான கணக்கியல் பதிவுகள் மெசொப்பொத்தேமியாவில் (Mesopotamia ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் பண்டைய மெசபடோமியாவின் ஆவணங்கள் செலவுகள் மற்றும் பெறப்பட்ட மற்றும் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்களைக் காட்டுகின்றன.


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கோழி நடுகல்

காலம்:- கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு

இடம்:- விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகம்



  1. முகையூரு மேற்சே, 
  2. ரிகு யாடிக, 
  3. ருகிய கோழி

முகையூர் மேற்சேரிக்கு; யாடி கருகிய கோழி


விளக்கம்:- 

“முகையூரில் மேல் சேரி என்னும் இடத்தில், சண்டையிட்டு இறந்த கோழி”





ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. நடுகல், கந்து எனும் கல்தூண் தொடங்கிய நம் வழிபாடுகள். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் போர்ச் சேவல்களைச் சிறப்பிக்கும் சான்றுகள் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்று அரசலாபுரம் கோழி நடுகல்.


கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கோழிக்கான நடுகல்.


                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



புத்தகம் :- “திருநிழலும் மண்ணுயிரும் - கொங்கு மண்ணின் தொல்லியல் நிகழ்வுகள்”


புத்தகம் :- “திருநிழலும் மண்ணுயிரும் - கொங்கு மண்ணின் தொல்லியல் நிகழ்வுகள்” 

  • பா. மீனாட்சி சுந்தரம்
  • நிமிர் வெளியீடு


திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பணிபுரிந்த போது அவர் மேற்கொண்ட தொல்லியல் பயணத்தில் கண்ட விடயங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.


👉 கோவையில் மாநகரில் “புலிக்குத்தி வீரன் நடுகல்”. கோவை நகரின் மையப் பகுதியான உக்கடத்தில், வாலாங் குளம் என்ற சிறிய குளம் அருகில் புலிக்குத்தி வீரனுக்கான நடுகல் இருக்கிறது. இந்தப் பகுதி மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். காடை அழித்து நாடை உருவாக்கும் பொழுது புலியுடன் போரிட்டு இருந்த வீரனுக்கான நினைவுகளே இந்த நடுகல். இப்பொழுது ஒரு மாநகரத்தின் மையப்பகுதியில் இந்த நடு கல் அமைந்துள்ளது. 





👉 ஆதாளி அம்மன். பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அருகே ஆதாளி அம்மனாக வழிபட்டு வரும் ஒரு பெண் தெய்வம், உண்மையில் சமணத்தில் 24-வது தீர்த்தங்கரமான மகாவீரர். 


  

                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏