- பா. மீனாட்சி சுந்தரம்
- நிமிர் வெளியீடு
திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பணிபுரிந்த போது அவர் மேற்கொண்ட தொல்லியல் பயணத்தில் கண்ட விடயங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.
👉 கோவையில் மாநகரில் “புலிக்குத்தி வீரன் நடுகல்”. கோவை நகரின் மையப் பகுதியான உக்கடத்தில், வாலாங் குளம் என்ற சிறிய குளம் அருகில் புலிக்குத்தி வீரனுக்கான நடுகல் இருக்கிறது. இந்தப் பகுதி மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். காடை அழித்து நாடை உருவாக்கும் பொழுது புலியுடன் போரிட்டு இருந்த வீரனுக்கான நினைவுகளே இந்த நடுகல். இப்பொழுது ஒரு மாநகரத்தின் மையப்பகுதியில் இந்த நடு கல் அமைந்துள்ளது.
👉 ஆதாளி அம்மன். பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அருகே ஆதாளி அம்மனாக வழிபட்டு வரும் ஒரு பெண் தெய்வம், உண்மையில் சமணத்தில் 24-வது தீர்த்தங்கரமான மகாவீரர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment