இடித்து கட்டுவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல..

இடித்து கட்டுவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல


குறிப்பு: மகேந்திரவர்மன்- மயிலை சீனி வேங்கடசாமி 





கிபி 7ஆம் நூற்றாண்டில் படலிபுரத்திலிருந்து சமணப் பள்ளியை இடித்து, அந்த கற்களை கொண்டு திருவதிகைச் சிவன் கோயிலை ‘குணதரவீச்சரம்’ கட்டினான் என்று பெரியபுராணம் கூறுகிறது.


"வீடறியாச் சமணர்மொழி,பொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் 

கூட இடித்துக்கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்


இந்த பாடலிபுரத்தின் சம்மணப் பள்ளியில் தான் திருநாவுக்கரசர் என்று அழைக்கப்படுகிற 'மரூணிக்கியார்' என்ற இயற்பெயர் கொண்ட 'தர்மசேனர்' என்ற சமண சமயமத குருவாக வாழ்ந்து வந்தார். தனது 55 வது வயதில் சூலைநோய் காரணமாக; அது குணம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக சைவ மதம் மாறினார் இந்த சமண மதகுரு. சமண மதத்தை ஏற்று ஆட்சி செய்த "மகேந்திரவர்மனை" சைவ மதத்திற்கு மாற்றியதும் இந்த மரூணிக்கியார்/தர்மசேனர் என்ற திருநாவுக்கரசர்தான். சைவ மதம் மாறிய பிறகு என்னன்ன செய்தார்கள் என்பதை மேலே கூறப்பட்ட பெரியபுராண செய்யுள் கூறுகிறது.


பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் ‘குணதரவீச்சரம்’ என்றே கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பதே இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்ற பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன்,குணதரன் என்னும் இரண்டு சொற்களூம் ஒரே அரசனைக் குறிக்கின்றன. 

‘குணபரன்’ மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்களில் ஒன்று ஆகும்.


பாடலிபுரம் என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்தது. அக்காலத்தில் பேர் போன சமணப்பள்ளி இந்த பாடலிபுரத்தில் இருந்தது. இந்த சமணப் பள்ளி தான் "லோகவிவாகம்" என்னும் நூலை "சர்வநந்தி" என்பவர் கிபி 458 ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரம் ஆட்சி செய்தபோது எழுதப்பட்டது. 


இந்த சமணப்பள்ளியை இடித்து அதன் கற்களை கொண்டு திருவதிகைச் சிவன் கோயிலை கட்டினார்கள். 


                     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



திராவிடம் யாருக்கு கசக்கும்

திராவிடம் யாருக்கு கசக்கும்”

ஆசிரியர் - பேரா. அ. கருணானந்தம்




திராவிடம் என்பது ஆரியம் அல்லாத ஆரியருக்கு முற்பட்ட ஒரு தொன்மையான நாகரீக மரபு என்பது ஆகும். சிந்து வெளி நாகரிகத்தை பார்க்கின்றோம், மொசபடோமிய நாகரிகத்தை பார்க்கின்றோம், இந்த நாகரிகங்களை படைத்தவர்கள் ‘இனக்கூறு’ வழியாக ‘உடற்கூறு’ அடிப்படையில் “திராவிடர்கள்” என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.


திராவிடத்திற்கு பல மொழிகள் உண்டு. திராவிடம் என்பதற்கு பல பரிணாமங்கள் உண்டு. ஒற்றை பரிணாமத்தில் பார்த்து விட முடியாது. 

திராவிடம் என்பது தமிழ் சொல்லா?! சங்ககாலத்தில் இருந்ததா?! என்ற கேள்வி எல்லாம் வருகிறது. சங்கம் என்ற சொல்லே சங்க நூல்களில் இல்லை, அதனால் இவை எல்லாம் சங்க நூல்கள் இல்லை என்று ஆகிவிடுமா?! சொல்லை வைத்து கொண்டு குழப்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் சிலருக்கு உண்டு. அந்த சிலர், வெறுப்புணர்வையும் பரப்பும் ஆரிய கங்கானிகள். 


அந்த சிலர் யார் என்றால்:- ராஜராஜ சோழன் எங்கள் ஜாதி என்று ஒருவர் சொல்கிறார். நாங்கள் பல்லவன் வழி வந்தவர்கள் என்று ஒருவர் சொல்கிறார். நாங்கள் பாண்டியர்கள் வழி வந்தவர்கள் என்று ஒருவர் சொல்கிறார். 

மன்னர்களை எல்லாம் "எங்கள் சாதி, எங்கள் சாதி என்று அந்த சாதிய பாசத்தோடு பிணைக்க பார்க்கிறார்கள் அல்லவா; அவர்களுக்குதான் திராவிடம் கசக்கும். 


மன்னர்களின் வரலாற்றின் பெருமையை பேசுகிறேன் என்று, பார்பனர்களுக்கு கங்கானிகள் வேலை பார்க்கும் இவர்களுக்குத்தான் திராவிடம் கசக்கும், சமத்துவம் கசக்கும், சகோதரத்துவம் கசக்கும்..


பக்தி இயக்கம் காலம் பிறகு பேரரசுகள், தம் மக்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை எடுத்துக்காட்டாக கூறும் “இளையான்புத்தூர்” செப்பேடு உள்ளது


இளையான்புதூர் செப்பேடு:-

கம்பலை என்ற உரிமைக் குரல்.. காவேரிக்கரை சோமயாஜி என்ற பிராமணனுக்கு கயத்தாறு அருகிலுள்ள திருமங்கலக் குறிச்சியில் (செப்பேட்டில் இளையான்புதூர்.. ஆகவே இளையான்புதூர் செப்பேடு ) நிலதானம் ஒன்றை அறிவிக்கிறான் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன்.. 


இந்த நிலதானத்தை எதிர்க்கிறார்கள் “கம்பலை”யின் தலைமையில் மக்கள் எதிர்கிறார்கள்.. எங்கள் நிலத்தை ஆரிய அந்நியர்களுக்கு கொடுப்பானே என்று வெகுண்டு எழுந்தான் கம்பல்... தங்கள் நிலங்களை வந்தேறி பார்ப்பனர்களுக்கு, தானம் கொடுத்ததை எதிர்த்தான்.. கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் உடைத்து எறிந்தான்...எதிர்த்தால் விட்டுவிடுமா பார்ப்பனிய அரசதிகாரம்.. கம்பலை என்னும் மறக்குடித் தலைவனை அடித்துக் கொன்று மீண்டும் அந்த தானத்தை நிலை நிறுத்தினார்கள். இப்படியான பெருமை கூறும் செப்பேடுதான் இந்த இளையான்புதூர் செப்பேடு.


மறக்கேடு:- 


மறக்குடி மக்கள் பிராமணகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து பிரமதேயங்களுக்குரிய அரச ஆவணங்களை அழிக்கிறார்கள். இந்தக்கிளர்ச்சி, “தளவாய்புரம்” செப்பேட்டில் “மறக்கேடு”  என்று குறிப்பிடப்பெறுகிறது. இத்தகைய மறக்கேட்டினால் ஆவணங்களை இழந்தவர்கள் மீண்டும் உரிமை கோரி எழுதியதன் காரணமாகவே, அரசனின் ஆட்சிக்கு நூறாண்டுகள் கழித்து இந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளது.


பக்தி என்பதே பணிந்து செல் என்று அர்த்தம். அந்த பக்தியை வைத்து ஆரியத்திற்கு வேளை செய்யும் கங்கானிகள் என்னென்ன அடிமைதனம் தமிழ் மக்கள் மீது செய்தார்கள் என்பதை எவர் பேசுகிறாரோ என்று பாருங்கள்?!

"திராவிட மொழிக் குடும்பமே இல்லை”, என பார்ப்பனர்களும், பார்ப்பன கங்கானிகளும் பசப்புவதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


திராவிடம் என்பது சுயமரியாதை-சமூக நீதிக் கருத்தியல். இதில் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு திராவிடம் கசக்கத்தான் செய்யும்.


                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


நீர் எழுத்து

நீர் எழுத்து



“நீர் எழுத்து” புத்தகத்தில் தமிழகத்தின் தண்ணீர் வரலாற்றை ‘சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டுகால நீர் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சி' என்று சரியாகவே முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் நக்கீரன்.


தமிழ்ப் பண்பாடு என்பதே , நீர் பண்பாடுதான்.

“இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும்” என்கிறது பிங்கல நிகண்டு.


நமது நீர்! நமது உரிமை! The human right to water and sanitation.


👉 சத்தீஸ்கர் மாநிலத்தின் ஓடும் ஓர் ஆற்றின் பெயர் “சியோநாத்” (Sheonath). 365 km நீளமுள்ள இந்த ஆற்றில் 23.6 km நீளமுள்ள ஒரு பகுதியை “ரேடியஸ் வாட்டர்” என்கிற தனியார் நிறுவனத்துக்கு 22 ஆண்டுகள் குத்தகைக்கு வழக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததைப் பற்றி அப்பகுதி மக்களுக்கு எதுவும் தெரியாது. ரேடியஸ் நிறுவனம் அங்கிருந்த 16 ஊர்களுக்கும் ஆற்றில் மீன் பிடிக்கத் தடை விதித்தது. பின்னர் விவசாய பாசன நீருக்கும் தடை விதிக்கப் பட்டது. மக்கள் வேறு வழியின்றி கிணத்து நீரைக் கொண்டு பாசனம் செய்ய முற்பட போது அதற்கும் தடை விதித்தது அந்நிறுவனம். 


“கிணறு வேண்டுமானால் உங்களுடையதாக இருக்காலம் ஆனால் அதில் ஊறும் நீர் எங்களுடையது” என்று பதில் சொன்னது அந்நிறுவனம் 😡


👉 திருப்பூரில் பெக்டெல் (Bechtel) மற்றும் கோவையில் சூயஸ் (Suez):- ஆசியாவிலேயே , நீர் தனியார் மயமாக்கப்பட்ட முதல் மாநகராட்சி திருப்பூர்.   இந்த பெக்டெல் நிறுவனம் பொலிவியாவில் என்ன செய்தது என்பது இங்கு யாருக்காவது தெரியுமா?!

தென்னாப்பிரிக்காவின் Johannesburg குடிநீர் பணத்துக்கு வழக்கிய நிறுவனம் தான் Jovam. இந்த நிறுவனம் தற்பொது Suez என்ற பெயரில் கோவை நகருக்குள் நுழைந்திருக்கிறது.


https://www.shareable.net/how-a-water-war-in-bolivia-led-to-the-reversal-of-privatization/


👉 தேசிய நீர்க் கொள்கை:-

நீர்த் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என்பதே இந்த கொள்கை. 

அதாவது நீர்ச் சேவையானது இனி தனியார் வசம் இருக்கும். அரசே தனியாரிடமிகுந்து நீரை விலைக்கொடுத்து வாங்க வேண்டும். இந்த நீரை அரசு மக்களுக்கு காசுக்கு விற்குமோ அல்லது இலவசமாக அளிக்குமோ அது அரசின் தலைவலி.

இந்த புதிய நீர்க் கொள்கையை ஸ்மார்ட்சிட்டி என்கிற பெயரில் பகுதிவாரியாக தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது பாசிச மோடி அரசு. 😡


👉 பிரம்மதேயமும் நீர் உரிமையும்:-

கிராம சபை என்பது பார்ப்பனக் குடிகளால் நிர்வகிக்கப்பட்டது. ஊர் அவை என்பது பெரும்பாலும் வேளாளர்களைக் கொண்டதாக இருந்தது. காசாக்குடிக் செப்பேடுகள் (கி.பி. 752), புல்லூர்ச் செப்பேடுகள் (கி.பி. 769) ஆகியவை நிலமும் நீரும் முன்பெற்றாரை மாற்றி பார்பனர்களுக்கு கொடுத்தது. 

இவ்வாறு வழங்கப்பட்ட நீர் உரிமைகளின் தன்மை கவனத்துக்குரியது. ஆற்றிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் வாய்க்கால்களைத் தோண்டிக் கொள்ளலாம். அதன் அகலத்தையும் அவர்களே முடிவுச் செய்யலாம். இவற்றில் பிறர் நீர் இறைக்கவோ கிளை வாய்க்கால்களை உருவாக்கவோ முடியாது. மீறுவோர் அரசரால் நேரடியாகத் தண்டிக்கப்படுவர். சத்தீஸ்கரின் சியோநாத் ஆறு ரேடியஸ் வாட்டர் நிறுவனத்துக்கு வழக்கப்பட்ட கதை அன்றே நிகழ்ந்துள்ளது.



👉 ஹார்மன் கோட்பாடு:-

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஹார்மன் என்பவர் ஆற்று நீர் பகிர்வில், ஆட்சி ‘எல்லை இறையாண்மை’  என்ற கோட்பாட்டை முன்வைத்தார். 

ஒரு நாடு தனது எல்லையில் ஓடும் ஆற்றை அதன் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் இறையாண்மை பெற்றிருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். பாசனம் பெறும் மற்ற நாடுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்


கர்நாடகம் கடைப்பிடிக்கும் ஹார்மன் கோட்பாடு. ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்குத் தர முடியாது என்று மூர்க்கத்தனமாக சொல்கிறது


👉 ஹெல்சிங்கி கோட்பாடு (Helsenki Rules):-

பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கி நகரில் 1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஐக்கிய நாடுகள் சபை  சட்ட வல்லுநர்களை அழைத்து நதி நீர் பங்கீடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் ஆற்று நீர் பிரச்னைகளை தீர்க்க உலக நாடுகள் ஆறுகள் பாயும் எல்லாப் பகுதிகளுக்கும்(நாடுகள், மாநிலங்கள்) அதன் மீது உரிமை உண்டு,  (பழங்கால) பழக்க வழக்கங்கள், ஒப்பந்தங்கள், உரிமைகள் அடிப்படையில் பங்கீடு பிரச்னையில் தீர்வு காண வேண்டும்,  உண்மையான விவரங்கள் அடிப்படையில் பிரச்னைகளை தீர்க்க வேண்டும், வடிநிலப்பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் என எல்லா நீர் நிலைகளையும் ஒன்றாக இணைத்து கணக்கீடு செய்ய வேண்டும், ஒரு நாட்டின் ஆற்று நீர் உரிமையில் மற்ற நாடுகள் குறுக்கீடு செய்யக் கூடாது ’ என்பது உட்பட பல்வேறு கோட்பாடுகளை பரிந்துரை செய்தது.  உலக நாடுகள் ஹெல்சிங்கி கோட்பாடுகளை கடைப்பிடித்து ஆற்று நீர் பங்கீடு பிரச்னைகள் தீர்த்துக் கொள்கின்றன.


எழுத்தாளர் நக்கீரன் அவர்களின் இதர புத்தகங்கள்

👉 “கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்”

👉 “உயிரைக் குடிக்கும் புட்டிநீர்”

👉 “அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்”

👉 “காடோடி” நாவலில் போர்னியோ காடுகளின் அழிவைப் பதிவு செய்தார். 

👉 “சூழலும் சாதியும்”


Other author books


👉 உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்த்

https://www.commonfolks.in/books/d/ulagamayamaakkal-adimaithalaiyil-india


👉 பொருட்களின் கதை - ஆனி லியோனார்டு

https://www.commonfolks.in/books/d/porutkalin-kathai


👉 ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Author: ஜான் பெர்க்கின்ஸ்

Translator: இரா. முருகவேள்

https://www.commonfolks.in/books/d/oru-porulaathaara-adiyaalin-opputhal-vaakkumoolam


👉 தமிழக பாசன வரலாறு - முனைவர்.பழ. கோமதிநாயகம்


👉 தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள் முனைவர்.பழ. கோமதிநாயகம்


👉 தமிழக வரலாற்றில் நீர் உரிமை - ஆசிரியர்: க.இரா. சங்கதன்


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏