குறள் 1062: Let the Creator of the world Perish

 குறள் 1062:

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.





சாலமன் பாப்பையா விளக்கம்:

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால்இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.


முகருணாநிதி விளக்கம்:

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.


English Couplet 1062:

If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so.


Couplet Explanation:

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go  begging and perish.


Bhakthavatsala Bharathi:-

கடவுள் கெட்டுப்போகட்டும் என்கிறார் திருவள்ளுவர் .

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்பரந்து கெடுக உலகியற்றி யான்". இந்தத் திருக்குறளைப் படிக்கப் படிக்க அறிவாராய்ச்சியியலில்(Epistemology) ஆழங்காற்பட வேண்டியுள்ளது அல்லது பொருள்கோடல்(Hermeneutics) செய்யவேண்டியுள்ளதுமேற்கூறிய குறளில் "இரந்து உயிர் வாழ வேண்டும்சூழல் ஒருவனுக்கு ஏற்படுமானால் கடவுள் கெட்டுப் போகட்டும் என்கிறார் வள்ளுவர்இவர் எந்த மதப் பின்னணியில் திருக்குறளை இயற்றினார் எனும் விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறதுஅவர் எந்தக் கருத்தியல்கோட்பாட்டியல் பின்புலத்தில் திருக்குறளை இயற்றினார் எனும் அறிவாராய்ச்சி நோக்கிலும் ஆராய வேண்டியுள்ளதுமேற்கூறிய குறளைப் பொருத்தவரை 

வள்ளுவர் "சமத்துவச் சமூகம்" (Egalitarian society) காண விரும்புகிறார். "ஆதிப் பொதுவுடைமை "Primitive_communism” காண விரும்புகிறார்வள்ளுவரின் மானிடவியல் மிகவும் ஆழமானதுஇந்த இரண்டு சமூக வடிவங்களும் ஆதிப் பழங்குடிகள் வாழ்வில் காணப்பட்டவைதொடர்ந்து சிந்திப்போம்.

                     🙏🙏🙏🙏🙏🙏🙏

உலகின் முதல் நாணயம்

தற்போதைய மேற்கு துருக்கியில் அப்போது அமைந்திருந்த லிடியா ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்ட உலோக நாணயம் 'Lydian Lion" என்னும் சிங்கம் உருவம் பொறித்த நாணயமே உலகின் முதல் உலோக நாணயமாகும். 





எலெக்ட்ரமில் இருந்து தயாரிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட முதல் மன்னர் அலியாட்ஸ் (Alyattes) ஆவார் மற்றும் அவரது மகனான குரோசஸ் (Croesus) தங்க நாணயங்களை முதலில் வெளியிட்டார்எனவே அலியாட்ஸ்(Alyattes) நாணயங்களை தோற்றுவித்தவர் என குறிப்பிடப்படுவர்





லிடியன் ஸ்டேட்டர் (Lydian_Stater) என்பது லிடியன் பேரரசின் அதிகாரப்பூர்வ நாணயமாகும்இது பாரசீக சாம்ராஜ்யத்தின் வசப்படுவதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது
கிமு 7 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில்அலியாட்டஸ் மன்னரின் ஆட்சியின் போது (கிமு 617) தேதியிட்டதாக நம்பப்படுகிறதுநாணயவியல் வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்துப்படிஉலக வரலாற்றில் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முதல் நாணயம் லிடியன் ஸ்டேட்டர் ஆகும்மேலும் இது அனைத்து அடுத்தடுத்த நாணயங்களுக்கும் மாதிரியாக இருந்தது.


முதல் நாணயங்கள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பேதங்கமும் வெள்ளியும் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டனவிலைமதிப்பற்ற உலோகத்தின் மோதிரங்கள் அல்லது இங்காட்கள் (பார்கள்பண்டைய உலகம் முழுவதும் பயணிகள் மற்றும் வர்த்தகர்களால் பயன்படுத்தப்பட்டனஆனால் அவை வர்த்தகத்தில் அவற்றின் மதிப்பைக்கணக்கிடும் பொருட்டு ஒவ்வொரு முறையும் ஒரு பரிவர்த்தனை நடைபெறும் போது அவற்றை எடைபோட்டு சரிபார்க்கவேண்டும்நாணயங்கள்அவற்றின் தரப்படுத்தப்பட்ட எடைகளுடன்இந்த நேரத்தைச் செலவழிக்கும் சிக்கலை நீக்கிஅவற்றை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள வர்த்தக வழித்தடமாக மாற்றியது.


பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் சீனாவிலும் இந்தியாவிலும் தனியாக நாணயங்கள் தோன்றியிருந்தாலும்இந்த முன்னேற்றங்கள் லிடியன் ஸ்டேட்டர் (Lydian Stater) அறிமுகத்திற்குப் பிறகு நடந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.


லிடியன் நாணயத்தின் முக்கியத்துவம் என்னவென்றால்விலைமதிப்பற்ற உலோகத்தின் ஒரு பகுதியை "நாட்டின்முத்திரைஇருப்பதுஇந்த நாணயங்கள் அதிகாரப்பூர்வ பணமாக அந்தஸ்தை பெற்றது.


              🙏🙏🙏🙏🙏🙏🙏


கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு.. -தோழர் அருணன்

கல்கி செய்த வரலாற்றுச் சிதைவு.. -தோழர் அருணன்




மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" கல்கியின் படைப்பை சிதைத்திடுமோ என்று பலரும் கவலைப்படுகிறார்கள்.

கல்கியின் படைப்பே வரலாற்றுச் சிதைவுதான்.

அந்த நாவலின் மையம் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை

அதைச் செய்தவர்கள் பற்றி உடையார் குடிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. 

"அக் கொலைக்கு காரணமானோர் பிராமணர்கள் என்பதையும் அக்கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் பின்வரும் நால்வராவார், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராசன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராசன், மலையனூரானான தேவதாசக் கிரமவித்தன்

இந்நால்வருள் இருவர் பஞ்சவன் பிரமாதிராசன், இருமுடிச்சோழ பிரமாதிராசன் என்னும் சிறந்த அரசியல் பட்டம் பெற்றோர் ஆவர். ஆதலின் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் உயர்நிலையில் இருந்தவர் என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருந்தும் ஏன் அரசிளங் குமாரரின் கொலைக்கு துணையாயினர் என்பது அறியக்கூடவில்லை" என்கிறார் சரித்திரப் பேராசிரியர் கே.கே.பிள்ளை. (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்)..


அந்தக் கல்வெட்டில் "பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று துரோகிகளான பிரமாணிமார்" என்று வருவதோடு "பாப்பனச் சேரி" என்றும் தெளிவாக வருகிறது..

இந்தக் கொலையாளிகளின் பெயர்களை அப்படியே தனது நாவலில் பயன்படுத்திய கல்கி அவர்கள் பிராமணர்கள், சோழ அரசில் உயர் பதவி வகித்தவர்கள் என்பதை மறைத்து, பாண்டியநாட்டு ஒற்றர்கள் என்று சித்தரித்திருக்கிறார்.

அதாவது உள்நாட்டு துரோகிகளை வெளிநாட்டு எதிரிகளாக மாற்றி வரலாற்றுக்கு துரோகம் செய்திருக்கிறார்.

கொலைக்கான காரணம் தெரியவில்லைதான்.

ஆனால் சோழ சாம் ராஜியத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அடுத்து பதவிக்கு வரப் போகிறவரைக் கொலை செய்ததில் சொந்தப் பகையைவிட அரசியல் பகை காரணமாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சுந்தர சோழன் பிராமணிய மதத்திடம் மட்டுமல்லாது சமண, புத்த மதங்களிடமும் தன்மையாக நடந்து கொண்டான். உலகபுரம் எனும் ஊரில் 'சுந்தர சோழப் பெரும் பள்ளி' எனும் புவுத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது..

இவன் சமணத்தின்பால் மாச்சரியம் இல்லாமல் இருந்தான் என்கிறது வீரசோழிய உரைச் செய்யுட்கள்..

இவனது மூத்த மகனாம் ஆதித்த கரிகாலனும் அத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவனாக இருந்திருக்கலாம்..

அது பிராமணிய மத பரவலுக்கு இடையூறானது என நினைத்து அந்த பிராமணர்கள் அவனைக் கொலை செய்திருக்கலாம்.

இப்படி ஊகிக்க வாய்ப்பு இருந்தும் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் பழியைத் தூக்கி பாண்டிய நாட்டுக்காரர்கள் மீது நாசூக்காகப் போட்டுவிட்டார் கல்கி.. கொலைகாரர்கள் பிராமணர்கள் எனும் உண்மையைச் சொன்னால் இந்த ஊகம் எழுந்துவிடும் என்பதால் அதை முழுமையாக மறைத்துவிட்டார்...

கல்கி அந்தக் காலத்து மதவிவகாரங்கள் எல்லாம் தெரியாதவர் அல்ல..

இதே நாவலில் சைவ, வைணவ போட்டி வந்திருக்கிறது. 'சிவகாமியின் சபதம்' நாவலிலோ புத்த பிட்சுவையே பிரதான வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்..

ஆதித்த கரிகாலன் விவகாரத்தில் மட்டும் கொலையாளிகளின் சாதி, மத பின்புலத்தை மறைத்து சரித்திர ஓட்டத்தை லாவகமாக திசை திருப்பிவிட்டார்..

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதைதான்..

அதில் சரித்திரம் எவ்வளவு, கதை எவ்வளவு என்பது கவனமான ஆய்வுக்குரியது. இதை அப்படியே தமிழரின் சரித்திரமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது.

நாவலுக்கே இந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது என்றால் படத்திற்கு எவ்வளவு எச்சரிக்கை தேவை என்பதை நேயர்கள் உணர்ந்து கொள்ளட்டும்..


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏