கோபெக்லி டெபே ( Göbekli Tepe ) - உலகின் முதல் கோயில்?

கோபெக்லி டெபே ( Göbekli Tepe ) - உலகின் முதல் கோயில்?



2018 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட துருக்கிய நகரமான சான்லியுர்ஃபாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோபெக்லி டெப்இம்மலையை துருக்கி மொழியில்பானைவயிறு மலை ("Potbelly Hill") என்று அழைப்பர்கற்காலத்தின் போது நம்பிக்கை மற்றும் புனித யாத்திரையின்மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது





சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு மேல் மெசபடோமியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும்நம்பிக்கைகள் பற்றிய நுண்ணறிவை வழங்கும் தனித்துவமான T- வடிவ தூண்கள் காட்டு விலங்குகளின்உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளனபழமையான செதுக்கப்பட்ட கற்கள்இதுவரை உலோகக் கருவிகள் அல்லதுமட்பாண்டங்களை உருவாக்காத வரலாற்றுக்கு முந்தைய மக்களால் வடிவமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டன அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்இந்த மலையை சடங்கு தியாகங்கள் மற்றும் விருந்துகளுக்குபயன்படுத்தியதாகக் கூறுகின்றன.





இந்த கோவில்களை ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஷ்மிட் (Klaus Schmidt) கண்டுபிடித்தார்.


மதத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் பெறுகிறதுநாகரீகம் மற்றும் மதம் என்பது மனித மனதின்விளைபொருள் என்பது திண்ணம். (civilization and religion are the product of the human mind)



                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பண்டைக்கால நிர்வாகம்

தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேரசோழபாண்டியபல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. ஆட்சி மற்றும் பொருளாதார வளமைக்காக நிலங்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டன

பண்டைய நிர்வாகம்:-

பல்லவர் காலத்தில் அவர்களது இராசியத்தை 

  1. கோட்டம்
  2. நாடு
  3. ஊர்

என பிரிக்கப்பட்டிருந்தது.


பல்லவர் கோட்டம்:-


தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்ததுஅவையாவன:

  1. புழல் கோட்டம்
  2. ஈக்காட்டுக் கோட்டம்
  3. மணவிற் கோட்டம்
  4. செங்காட்டுக் கோட்டம்
  5. பையூர்க் கோட்டம்
  6. எயில் கோட்டம்
  7. தாமல் கோட்டம்
  8. ஊற்றுக்காட்டுக் கோட்டம்
  9. களத்துர்க் கோட்டம்
  10. செம்பூர்க் கோட்டம்
  11. ஆம்பூர்க் கோட்டம்
  12. வெண்குன்றக் கோட்டம்
  13. பலகுன்றக் கோட்டம்
  14. இலங்காட்டுக் கோட்டம்
  15. கலியூர்க் கோட்டம்
  16. செங்கரைக் கோட்டம்
  17. படுவூர்க் கோட்டம்
  18. கடிகூர்க் கோட்டம்
  19. செந்திருக்கைக் கோட்டம்
  20. குன்றவட்டான கோட்டம்
  21. வேங்கடக்கோட்டம்
  22. வேலூர்க்கோட்டம்
  23. சேத்துர்க் கோட்டம்
  24. புலியூர்க்கோட்டம்


சோழர்கள் காலத்தில் அவர்களது இராசியத்தை 

  1. மண்டலம் மற்றும் பாடி
  2. வளநாடு
  3. நாடு
  4. ஊர்

என பிரிக்கப்பட்டிருந்தது.


சோழ மண்டலம்:-




  • ஊர் என்பது சிறிய பிரிவாக (கிராமம்ஆகும்.
  • பல ஊர்கள் கொண்டது நாடு.
  • நாடுகள் பல கொண்டதாக வளநாடு இருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் பத்து வளநாடுகளாக பிரிக்கப்பட்டதுமண்டலமானது சோழர்களின் பிராந்தியப்பிரிவுகளில் மிகப்பெரியது

சோழ நாடு தன் அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபோதுஅது ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்ததுஇதில்இலங்கை போன்ற வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளும் அடங்கும்

  1. சோழமண்டலம்
  2. தொண்டைமண்டலம் / ஜயங்கொண்ட சோழமண்டலம்
  3. கொங்குமண்டலம்
  4. பாண்டியமண்டலம் அல்லது இராஜராஜபாண்டிமண்டலம்
  5. கங்கபாடி
  6. தடிகைபாடி
  7. நுளம்பபாடி
  8. மரையபாடி
  9. மும்முடிசோழமண்டலம் / ஈழமண்டலம்


இலச்சினை

  • பாண்டியர்க்கு -> மீனும்
  • சோழர்க்குப் -> புலியும்
  • சேரர்க்கு -> வில்லும்
  • பல்லவர்க்கு -> நந்தி
  • கங்கர்க்கு -> நாகமும்
  • சாளுக்கியர்க்கு -> பன்றியும்

                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


சாங்கியம் - தத்துவம்

சாங்கியம் 

இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும்.


சாங்கிய தத்துவத்தை நிறுவிய கபிலர்.

கபிலர் என்பது தமிழ் பெயர்அவர் தமிழில் எழுதிய நூல் எண்ணியம்அவர் காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் முந்தியதுபெளத்தம்சமணம் ஆகிய பெரிய மதங்கள் உருவாவதற்கு வெகு காலத்துக்கு முன்பே சாங்கியம் வளர்ந்து வலுப்பெற்றிருந்தது என்று கூற ஆதாரமுள்ளது

அஸ்வகோஷனின் புத்த சரிதம் என்ற நூலில் புத்தருக்கு காலத்தால் முந்திய பல சாங்கிய அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சாங்காயம் என்பது பழங்குடி மரபில் இருந்து முளைத்தது என்கிறார் ரிச்சர்ட் கார்பே ( Richard Garbe : Ancient Indian Philosophy )


சாங்கிய தரிசனத்தின் ஆதி குரு கபிலர்ஆனால் கபிலர் என்ற பெயர் முழுமையானதல்லஅது அடையாளப் பெயராக பரவலாகப் புழக்கத்திலிருந்திருக்கலாம்சங்ககால மரபிலேயே தொல்கபிலர்கபிலர் என்று இரு கவிஞர்கள் பற்றிய தகவல்கள் உள்ளனகபிலர் குறித்து சில புராண நம்பிக்கைகள் தவிர தெளிவான சரித்திரம் ஏதும் இப்போது கிடைப்பது இல்லைரிச்சர்ட் கார்பே என்ற வரலாற்றாசிரியர் கபிலனின் நினைவாகவே கபில வாஸ்து என்ற பெயர் அந்நகருக்கு சூட்டப்பட்டது என்கிறார்புத்த மதத்துக்கு சாங்கிய மதத்திடம் உள்ள நெருங்கிய உறவுக்கும் இதுவிளக்கம் தருகிறதுஆனால் கபிலன் வசித்த இடம் என்ற பொருள் வரும் கபில வாஸ்துவுக்கும் கபிலனுடன் உறவுண்டு என்று காட்டும் வேறு ஆதாரம் ஏதும் இல்லை.


சாங்கிய மற்றும் வைதிக மதம்:-


கபிலர் பிராமணப் புரோகிதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற ஐதீகக் கதையை சில பிற்கால நூல்களில் காண்கிறோம்அதற்கு உரிய ஆதாரம் ஏதும் தரப்படவில்லைஆனால் அடிப்படையில் சாங்கிய மதத்துக்கு வைதிக புரோகித மதத்துடன் முழுமையான எதிர்ப்பு காணப்படுகிறதுவெகுகாலம் சாங்கிய மதம் புரோகித மதத்துக்குஎதிரான பெரும் சக்தியாக விளங்கியிருக்கக்கூடும்சாங்கியத்தை சார்வாகமதத்தின் ஒரு தர்க்கபூர்வமான வளர்ச்சிநிலையாகக் காண்பதிலும் தவறில்லை.


சாங்கிய தத்துவம்:-


பிரகிருதி (இயற்கை), புருடன் (அறிவுள்ள பொருள்ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும்பரம்பொருள் (இறைவன்குறித்து எதுவும் கூறப்படவில்லை


முக்குணங்கள்பஞ்ச பூதங்கள்மனம்மற்றும் பிரபஞ்சத்தின் படைப்புஇருப்பு மற்றும் அழிவு குறித்து விரிவாகஎடுத்துரைக்கிறது.


புருடன் :- அறிவுள்ள பொருள் என்றும் 

பிரகிருதி:- அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றதுஉலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.


மூன்று குணங்கள்:-

  1. சாத்விக குணம்
  2. இராஜச குணம்
  3. தாமச குணம் ஆகியவை உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றன

 



சாங்கியத் தரிசனம் குறித்த மிகப் புராதன நூல்கள் எவையும் இப்போது கிடைப்பதில்லைகபிலனில் மூலநூல் என்று கூறப்பட்ட சாங்கிய பிரவசன சூத்ரம் உண்மையில் மிகவும் பின்னால் – 14 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதுநமக்கு கிடைக்கும் மிகப்பழைய  நூல் ஈஸ்வர கிரிஷ்ண சூரி எழுதிய சாங்கிய காரிகைஅது கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.


உலகின் தொற்றத்திற்கு எது காரணம்?! கருத்தா (கடவுள்) அல்லது பொருளா?! கருத்து முதல்வாதமா அல்லது பொருள் முதல் வாதமா?!

கருத்து முதல்வாதம் என்று ஆத்திகர்களும்;

பொருள் முதல்வீதம் என்று நாத்திகர்களும் மூவாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே இந்த விவாதம் இருந்தது. கருத்து மற்றும் பொருள் என இரண்டையும் விளக்கும் தத்துவமாக சாங்கியம் இருந்தது. 


அவ்வை என்ற பெயரை போன்றே  கபிலர் என்னும் பெயரில் பல அறிஞர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 

  • சாங்கிய தத்துவம் இயற்றிய கபிலர் - கிமு 5ஆம் நூற்றாண்டு
  • குறிஞ்சி பாடிய கபிலர் - கிமு 3ஆம் நூற்றாண்டு
  • இன்னா நாற்பது இயற்றிய கபிலர் - கிபி 2ஆம் நூற்றாண்டு


                        🙏🙏🙏🙏🙏🙏🙏🙏