சிதம்பரம் ஆலயமும் நந்தன் வரலாறும்

சிதம்பரம் ஆலயமும் நந்தன் வரலாறும் 
(நன்றி -    https://keetru.com/index.php/)

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
 தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
 “சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்”


சைவ மரபில் அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த பல கோவில்கள் தமிழகத்தில் இருப்பினும் சிதம்பரம் நடராசர் ஆலயம் மட்டுமே கோயில் என்று குறிக்கப்படுகிறதுஅதாவது கோயில் என்றால் அது நடராசர் ஆலயம்தான்சிதம்பரம் பகுதியை சுற்றி உள்ள உழைப்பாளி மக்களின் உதிரத்தில் உதித்த இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழைமையானது என்றாலும்1947 க்கு பிறகுதான் இந்த ஆலயத்தினுள் தலித் மக்கள் நுழைய முடிந்தது. 1932 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆலயநுழைவு அறைகூவலை எற்று சுவாமி சகஜானந்தா தலைமையில் சிதம்பரம் ஆலயநுழைவு போராட்டம் நடந்தபோது மேலரத வீதியில் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர்அதன் பின் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபின்புதான் அங்கு அவரது தலைமையில் அந்த போராட்டம் வெற்றி அடைந்தது


ஆலயநுழைவு போராட்டம் சில தகவல்கள்:-


  • சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18/01/1926 இல்கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.
  • முதல்கோவில் நுழைவுப் போராட்டத்தைத்தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜேஎஸ்கண்ணப்பர்இவர் 07/02/1927இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார்அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர்அவர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றதுவழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928).

  • சகஜானந்தர் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார்தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஆதி திராவிடர்’ எனக்கூறாமல் ‘ஆதி இந்துக்கள்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கோரியவர்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தை மேற்கொண்டவர்களெனக் கருதப் படுவதால் அவர்களும் இந்துக்களே என்று கூறி சகஜானந்தர் தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப் பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார். (சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விஷயமாக ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டது
  • 1934ல் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார்சாதிவெறி பிடித்தவர்கள் சகஜானந்தரைத் தாக்கினர்அது பெருங்கலகத்தில் முடிந்ததுதொடர்ந்து பிரச்சாரம்போராட்டங்களின் விளைவாக 1947 ஜூன் மாதம் 2ம் நாள் சகஜானந்தர் கோயில் நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார்நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்டவர்களுடன் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபட்டு நாங்களும்இந்துக்கள்தான்எங்களுக்கும் இந்த கோயிலில் நுழைய அனுமதி உண்டு என்பதை பறைசாற்றினார்.




காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் சதுப்பு நிலங்கள் நிறைந்த தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் சிதம்பரம்சிதம்பரம் நகராட்சி தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பழைமை வாய்ந்த நகராட்சியாகும். 33 வார்டுகளும்கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் தொகையும் கொண்ட சிதம்பரம் நகராட்சி 1873 ஆண்டு அமைக்கப்பட்டதாகும்ஒருகாலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த காட்டுபகுதியாக இருந்த இடம் இதுபுலிகள் அதிகம் இந்த காடுகளில் வசித்ததால் இந்த பகுதி பெரும்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகிறதுஆகாய வடிவமாக இத்தலம் திகழ்வதால் ஞான ஆகாசம் என்றும் கூறப் படுகிறதுஇந்த ஆகாசம் பூத ஆகாசம் போல்சடம் ஆகாதுசித்தாக விளங்குவதால் சித் + அம்பரம் = சிதம்பரம் எனும் பெயர் பெற்றதுமக்கள் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை கடவுள் சக்தி என்று நம்பிய அன்றைய மக்கள் அந்த சம்பவம் நடைபெறும் இடங்களில் கடவுள் வந்திருப்பதாக நம்பினர்அந்த இடத்தில் குடிசை அமைத்து வனங்கினர்குடி இருத்தல் என்றால் தெய்வம் தங்கி இருக்கும் இடம் என்று அர்த்தம்கோயில்கோட்டம்மன்றம் என்பவை யெல்லாம் பிற்கால பெயர்கள்குடியென்பதே பழம் பெயர்தொல் திராவிட மொழியில் கோயில் குடி என்றே உள்ளதுஇன்றும் கன்னடத்திலும்தெலுங்கிலும் கோயிலை குடி யென்றே அழைக்கின்றனர்குடியின் மீது ஓலையால் வேயப்பட்ட இடத்தை குடிசைஎன்ற ழைத்தனர்இன்றும் பழமை மாறாமல் குடிசை வடிவிலேயே சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் எனும் மையமண்டபம் உள்ளதுகோயிலின் கூரையில் பொன்வேய்ந்து பிற்காலத்தில் எத்துணையோ மாற்றங்கள் வந்த பின்பும்பொன்னம் பலத்தின் குடிசை அமைப்பு மட்டும் மாறவே இல்லைசிதம்பரம் கோவிலின் தொன்மைக்கு இது சான்றாகநிற்கிறது


தொன்மைவாய்ந்த கோயில் என்றாலும் இக்கோயில் குறித்து சங்க இலக்கியங்களில் எந்த குறிப்பும் காணப்படவில்லைசோழ வம்சத்தின் கடைசி மன்னனாக கருதப்படும் கோச்செங்கட் சோழன் பிறப்பதற்காக வேண்டி அவனது தாய் தந்தையர் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டதாகவும்கோச்செங்கட் சோழன் சிதம்பரம் கோவிலை செப்பனிட்டதாகவும்நகரைச் சீர்திருத்தி அமைத் தாகவும் பெரியபுராண செய்திகள் உள்ளன. (கோச் செங்கட் சோழநாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்). 

  • கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை
  • பின் 5 ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரத்தில் இக் கோயில் குறித்த குறிப்புகள் உள்ளன
  • கி.பி 6 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிதம்பரத்திற்கு வந்து வழி பட்டுள்ளசெய்தி இருக்கிறது
  • கி.பி 7 ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கோயிலுக்கு வந்துள்ளனர்
  • ஆம் நூற்றாண்டுக்கு பின்பு இக்கோவிலின் வரலாறு முழுமையாக கிடைக்கிறது


சிதம்பரம் கோவிலின் விரிவாக்கம்:-


  • கிழக்குக் கோபுரம் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி 1138-1150) பின்பு காடவர் கோன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் முடிக்கப்பட்டது.
  • தெற்குக்கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி 1237-40 காலத்தில் கட்டப்பட்டது
  • மேற்குக்கோபுரம் எழுநிலையுடன் முதல் ஜடவர்ம பாண்டியனால் கி.பி 1207 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது
  • வடக்குக் கோபுரம் எழுநிலையுடன் தனது ஒரிசா போர்க்களத்து வெற்றியின் நினைவாக விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனால் கட்டப்பட்டது.
  • சோழர்கள்பாண்டிய மன்னன்என பலரும் இந்த கோவிலை விரிவாக்கம் செய்து 12 ஆம் நுற்றாண்டில் தற்போதுஉள்ள நிலைக்கு ஆலயம் வந்தது.


நந்தன் வரலாறு:-


"புண்பலை நோய் தீண்டப்பெற்ற புறத் திருத்தொண்டன் நந்தன்என 8 ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், "செம்மையே திருநாளைப் போவதற்கும் அடியேன்என்று 12 ஆம் நுற்றாண்டில் பெரியபுராணம் என்கிற திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழாரும், 1861 இல் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் கோபால கிருஷ்ணபாரதியும் நந்தன் குறித்து பேசி உள்ளனர்இந்த இலக்கியங்களில் நந்தன் சிவனை வழிபட வந்து நந்தன் சாம்பலானான் என்கிறதுபெரிய புராணம் நந்தன் சிதம்பரத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஓமகுளத்தில் (ஹோமகுளம்நெருப்பில் இறங்கி பிராமணனாக மாறி சிவனடி சேர்ந்தார் என்று கூறுகிறதுகோபாலகிருஷ்ண பாரதிநந்தன் தெற்குவாயில் வழியாக ஆலையத்தினுள் நுழைந்தான் அதனால் மடிந்தான் என்று கூறுகிறார்இந்த பழம்பெரும் சான்றாதரங்களை வைத்துதான் அந்த ஆலையத்தின் தெற்கு வாயில் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதுஆனால் நந்தன் இவ்வழியே வரவில்லை என்றும் பல கதைகள் உள்ளன


கதை 1 :

கி.பி 1798இல் தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் தொகுக்கப்பட்ட சுவடிகள் (தமிழக அரசின் கீழ்திசைச் சுவடிகள் நூலகம் சார்பில் பதிப்பிக்கபட்டுள்ள இடங்கை வலங்கையர் வரலாறு என்று நூலாக வெளிவந்துள்ளதுநந்தன் குறித்து கூறும் கதை வேறு விதமானதுஇராவண னின் வாரிசுகளில் ஒருவராகச் சொல்லப்படும் தியாகச்சாம்பானுடைய மகளுக்கும் சோழ ராசாவுக்கும் பிறந்த நந்தன் ஒரு சோழமண்டல அரசன்தியாகச்சாம்பான் ஒரு தலித் என்பதால் நந்தனும் அப்படியே அறியப்பட்டடான்நந்தனுக்கு ஒரு வெள்ளாள சாதியை சார்ந்த பெண்ணை மணம் முடிக்க நினைத்ததால் பிரச்சனை துவங்கியதுதாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு தங்களது பெண்ணை திருமணம் முடிக்க ஆதிக்கசாதியினர் தயாரில்லைஆனால் அதிகாரத்தில் உள்ள நந்தனை எதிர்க்கவும் துணிவில்லைஎனவே பெண் பார்க்க நந்தனை தனது சாதி சனத்துடன் வரச்சொல்லிகம்மாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கொலைசெய்ய தூண்டுகின்றனர்அப்படியே பெண்பார்க்க வந்த நந்தனையும் அவனது சுற்றத் தாரையும் கம்மாளர்கள் உதவியுடன் வெள்ளாளர் கள் பந்தலில் சூட்சுமம் செய்து படுகொலை செய்கின்றனர்.


கதை 2:

1910 ஆம் ஆண்டில் அயோத்திதாச பண்டிதர் தமிழன் ஏட்டில் "இந்திரர் தேச சரித்திரத்தில்என்ற தொடரில் நந்தன் குறித்து வேறு விதமாக எழுதியுள்ளார்புன நாட்டின் வடக்கே வாதகூ ரெனும் தேசத்தை அரசாண்ட விவேகம் மிக்க மன்னன் நத்தன்இவன் பவுத்த நெறி நின்று அரசாண்ட மன்னன்இவனது நாட்டிற்கு பக்கத்தில் உள்ள சோணாநாட்டில் வேஷபிராமணர்கள் ஒரு சிவாலயத்தை கட்டி மக்களையும்மன்னர்களையும் ஏமாற்றி வந்தனர்நந்தனின்புகழை அறிந்து அவனை ஏமாற்ற புத்த துறவிகள் போல வேட மிட்டு நந்தனைக் காண வந்தனர்ஆனால் அவர்கள் பொய்வேடம் கலைந்து நாட்டைவிட்டு விரட்டப் படுகின்றனர்அப்படி ஓடியவர்கள் தங்கள் அவமானம் வெளியே தெரிந்தால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சினர்நந்தன் அரணமனைக்கு மேற்கே அரைக் காத தூரத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் மண்மேட்டை தோண்டி அதன் மத்தியில் கல்லால் ஆன தூண்களை வைத்துபழைய கட்டடம் உள்ளது போல அமைப்பை ஏற்படுத்தி அதன் மத்தியில் காலை வைத்தால் விழும் அடிப் படையில் சூழ்ச்சி செய்து மன்னனை அழைத்து பார்வை இடச் சொல்கின்றனர்அப்படி சென்ற நந்தன் அந்த சூழ்ச்சியில் சிக்கிக்கொலை செய்யப்படுகிறான்.


கதை 3 :

(நந்திக் கலம்பகம்ஒரு ராசா இருந்தார்அவருக்கு ஒரு மனைவி இருந்தாள்அவள் மூல மாக ஏழு பிள்ளைகள் பிறந்தனர்அந்த ராசாவுக்கு ஒரு வைப்பாட்டி இருந்தாள்அவள் மூலம் பிறந்த ஆண் பிள்ளைதான் நந்திஅந்த ராசாதன்னுடைய வைப்பாட்டி மகனான நந்திக்கு முடிசூட்டினான்அவன் மன்னனான சிறிது காலத் திற்கு பிறகு தந்தை இறந்தான்பின் நந்திராசா அந்த முதல் தாயையும் ஏழு பிள்ளைகளையும் கொடுமை செய்தான்அதனால் அவர்கள் திருடி பிழைக்க முடிவு செய் தனர்நந்தியின் அரண்மனையிலேயே திருட்டை துவக்கினர்திருடச்சென்ற முதல் ஆறுபேரையும் நந்தி தலையை வெட்டிக் கொன்றான்ஏழாம் பிள்ளை தப்பிசென்று ஒரு கவிராயனிடம் சேர்ந் தான்அவனிடம் வித்தைகளைக் கற்றுக் கொண்டு நந்திக் கலம்பகம் என்ற 100 பாடல்களை இயற்றினான்இது நந்தியைப்புகழ்வது போல இருப்பினும் இந்த பாடல்களை கேட்டு முடிக்கும்போது நந்தி மரணமடைவான்அப்படியே நடந்தது.


காலத்தால் மிகவும் பின்பு உருவாக்கப்பட்ட இந்த மூன்று கதைகளில் நந்தன் கூலி தொழிலாளி இல்லை மன்னன் என்கிறதுநந்தன் பற்றி இன்னும் கதைகள் இருக்கக்கூடும்இதில் கவனிக்க வேண்டியது அயோத்திதாசர் பௌத்தமதத்தை முன் வைத்து ஒரு கதையாடலை கட்டமைக்கிறார்அது பிராமணர்கள் பௌத்த சமண கோயில்களை இடித்துசமணர்களை கழுவிலேற்றிப் படுகொலை செய்து இந்து மதத்தை ஆட்சியதிகார வன்முறையால் நிறுவியதற்கு எதிரான புரட்சிகர கதையாடல்ஆனால் அந்த கதைகான வரலாற்றுச் சான்றுகள் எதுவுமில்லைஅடுத்து தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் எழுதப்பட்ட சுவடிகளில் சிதம்பரத்தில் நடந்த நந்தன் கதை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லைநந்திக் கலம்பகமும் சிதம்பரம் பக்கம் நடந்ததா என்பதும் ஐயமுடையதேஆகநந்தன் ஆலயமே நுழையாதபோது இந்த ஆலயச் சுவர் இடிப்பு ஏன் என்ற கேள்விக்கு இடம் வைக்கும் இந்த கதைகளின் நோக்கம் இன்னும் ஆராயப்பட வேண்டியது.


மேலும் ஒரு கதை:

(எங்கள் கள ஆய்வின் போது வாய்மொழித் தரவாகக் கிடைத்ததுநந்தன் புலைச்சேரியில் பிறக்கவில்லைசேரியில் கீழே திடீரென கிடந்த குழந்தைகிடந்தவனை தலித் தம்பதியினர் எடுத்து வளர்க்கின்றனர்நந்தன் வேறு யாருமல்லசிவபெருமானே அப்படி குழந்தையாகக் கிடந்தார்பின்பு ஓமகுளத்தருகே நெருப்பில் இறங்கி பிராமண வேடம் பூண்டு ஆலயம் சென்று சொரூபமாகினார்இந்த கடைசி கதை அவன் மன்னனும் அல்ல மனிதனும் அல்ல சிவனே நந்தனாகப் பிறந்தான் என்கிறதுஇருப்பினும் சிவனே தலித்தாக வளர்ந்தாலும் பிராணர்களை எதிர்த்து ஆலயம் நுழைய தீயில் இறங்க வேண்டியுள்ளது.


நிகழ்காலத்தில் எழுந்துள்ள ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியுடன் இணைந்த கேள்வி மிகவும் முக்கியமானதுதெற்கு வீதியில் உள்ள வாயில் அடைக்கப்பட காரணம் தீண்டாமைதான் என்று கோரிக்கை எழும்போது அது இல்லை எனில் வேறு எந்த காரணத்திற்காக அந்தப் பாதை மூடப்பட்டுள்ளது என்பதை மூடியவர்கள் சொல்ல வேண்டும்அல்லது அடைத்தவர்கள் அடைத்த சுவரை இடித்துப் பாதையைத் திறந்து விட வேண்டும்ஆலயங்கள் தெய்வங்கள் இருப்பிடம் எனில் அந்த ஆலயம் அனைவரையும் அரவணைப் பதாக இருந்திட வேண்டும்ஆனால் இன்றும் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களில் தலித் மக்கள் உள்ளே செல்லக் கடுமையாகப் போராட வேண்டிஉள்ளதுசமூகத்தின் பொது வெளியில் எழுந்துள்ள கேள்விகளை அத்துணை எளிதாக யாரும் புறக்கணிக்க முடியாது



இறுதியாக:-


சாதியற்ற ‘குடிச்சமூகமாக’ இருந்து சாதிக்கு அருகாமையில் வந்து நின்று பின் செங்குத்துப் படிநிலைகளோடு கூடிய சாதியாக மாறிய தமிழ்ச்சமூகம்பிராமணியக் கோட்பாட்டை உள்வாங்கியதால் சீரழிந்தது.


தமிழ் வேந்தர்களும் சங்க காலத்திலேயே பிராமணர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள்பிராமணர்களின் வேள்வியாகங்கள் மீது கவரப்பட்டார்கள்பிந்தைய காலத் தமிழ் வேந்தர்கள் அவர்களை அரசுமுறை பூசகர்களாகவே நியமித்துக் கொண்டார்கள்இதன் மூலம் அரசர்களுக்கு நெருக்கமானவர்களாக மாறியதுடன் சதுர்வேதி மங்கலங்கள்அக்ரஹாரங்கள்தேவதான மானியங்கள்பிரம்மதேயங்கள் எனும் வகைகளில் நிலத்தைத் தானமாகப் பெற்றார்கள்


தமிழ்ச் சூழலில் சாதியத்தின் வன்மத்தை ஒழிப்பதற்கு நீண்ட காலக் கருத்தியல் முன்னெடுப்புகளும் செயல்திட்டங்களும் முன்வைக்கப்பட்டனதந்தை பெரியார்அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்த திட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும்முழுமையான சமூக மாற்றத்தைக் காணவில்லைஆனால்சாதியம் புதிய புதியவடிங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறதுசாதியற்ற தமிழராய் வாழ்வது இன்னும் சாத்தியப்படவில்லைஉடனடியான எதிர்காலத்திலும் அத்தகைய சூழல் தென்படவில்லைஅதனால் இன்னும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் அவசியமாகின்றன.


                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏







வரலாறும் வக்கிரங்களும் - ரொமிலா தாப்பர்

வரலாறும் வக்கிரங்களும்

வரலாறும், வக்கிரங்களும் என்ற இச்சிறுநூல் வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகும். இந்த நூல் The Past and Prejudice என்ற நூலின் தமிழாக்கமாகும். நூலாசிரியர் ரொமீலா தாப்பர் அறிவுலகம் நன்கறிந்த தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் முதன்மையானவர். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, வரலாற்றாய்வை வளர்க்க வழிகாட்டத்தக்க ஒரு நல்ல நூல் இது

வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் ரொமீலா தாப்பரின் இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது.



இந்நூலிலிருந்து சில குறிப்புகள்:-

👉வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளை வெறுமென பட்டியலிட்டுக் காட்டுவதல்ல. மாறாக உற்பத்திக் கருவிகள் படிப்படியாக முன்னுக்கு வந்ததன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டு வந்த மாறுதல்களை அறிவதேயாகும் 

👉விபரங்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிந்து அந்த உண்மைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவேண்டும் என்ற உயரிய அறிவுபூர்வமான பொதுக் கோட்பாடு வரலாற்று ஆய்வுக்கு மிகமிக அவசியமானதாகும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தங்கள் வசதிக்கேற்ப ஒரு முடிவை அல்லது முடிவுகளை எடுத்துவிட்டு அவைகளுக்கேற்ப “விபரங்களை சேகரிப்பதிலும் அல்லது உண்மை விபரங்களை திரித்து திசை மாற்றுவதிலும் ஒரு சாரார் எப்போதுமே ஈடுபட்டு வந்துள்ளனர். இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். 

👉எத்தனையோ பண்பாட்டுகளின் கலப்பில் இந்திய பண்பாடு உதயமாயிற்று. அவற்றுள் முக்கியமான இரு பண்பாடுகள் திராவிட பண்பாடு மற்றும் ஆரியப் பண்பாடு

👉திராவிட மொழியிலிலிருந்து பிறந்த சொற்கள் ரிக் வேதத்தில் உள்ளன. சமஸ்கிருத மொழியின் வளர்ச்சியை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால், திராவிட மொழியிலிருந்து கடன் பெறப்பட்ட சொற்களில் பெரும்பான்மையானவை. கி.மு. 1000-லிருந்து 500 வரையிலான காலத்தில் நுழைந்தவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இக்காலத்தையே பிற்கால வேத காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.

👉கி.மு 1500ற்கு முன்னால் ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இனக்குழு சமுதாயங்கள் இருந்தன என்பது அகழ்வாராய்ச்சியால் புலனாகிறது. கி.மு 3000 ஆண்டிலேயே “ஏருழுவு” முறை இருந்ததென்பதை ஹரப்பா ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆரியர்கள் வருமுன் இங்கு வாழ்ந்தவந்த பூர்விக மக்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது. வேதங்களில் காணப்படும் விவசாயம் குறித்த சொற்கள் ஆரியமில்லாத மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. “லாங்கலா”, “ஹலா” (ஏர்), குட்டலா (களம்), கலா (கூடை), உலுகாலா (உரல்), பள்ளி ( சிறு கிராம்ம்) முதலியன. 

👉குப்தர் காலத்திற்கு மற்றும் கி.பி. 500-க்கு பின்னர், நிலங்களும், கிராமங்களும் கோயில்களின் உடைமைகளாயின. ஏராளமான நிலவருவாயும், காணிக்கை வருவாயும் அவற்றிற்குக் கிடைத்தன. கோயில் நிதியை நிர்வகிக்கும் பதவிகள், அரசரது ஆதரவைப் பெற்றவர்களுக்கே கிடைக்கும். கோயில்கள் கல்வி நிறுவனங்களாகி, பிராம்மணீயக் கல்விக்கு நிறுவன அடிப்படையை அமைத்தன. மடங்கள், கோயில்களின் மூலம் பிராம்மணீயக் கருத்துகள் திட்டமிட்ட வகையில் பரவ வழி பிறந்தது.

👉சத்திரியர்கள் பிராம்மணர்களோடு ஒத்துப்போவது ஒரு பிரச்சனையாகிவிட்டது. இப்பிரச்சினைக்கு அடையாளபூர்வமான புனைகதைதான் பரசுராமன் கதையாகும். பௌத்த நூல்கள் சத்திரியனுக்கு நிலவுடைமை யாளன், குழுத் தலைவன் என்ற நிலைகளில் முக்கியத்துவம் அளிக்கிறது. கொள்கையளவில் அரசர்கள் சத்திரியர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் குப்தர் காலத்திற்கு முன்னர் சத்திரிய அரசு பரம்பரைகள் அபூர்வமாகவே காணப்படுகின்றன. நந்தர்கள், சூத்திரர்கள், மௌரியர்கள், ஆகியோரை தாழ்ந்த குலத்தவர் என பிராம்மண நூல்கள் கூறுகின்றன. சுங்கர்கள், சேதியர், சோழர், பாண்டியர், சேரர், ஆந்திரர் ஆகியவர்கள் சத்திரியர்கள் அல்ல. அவ்வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள வில்லை

👉இனக்குழுக்களும், படை குழுக்களும், தொழில் குழுக்களும் சாதிகளாக மாறியபொழுது, அவற்றிற்கு வருண அந்தஸ்தும், சாதி அந்தஸ்தும் அளிக்கப்பட்டன

👉சாதிப் புராணங்களின் நோக்கம், சாதிகளின் பழைய மரபைப் பாதுகாத்து சாதி அடுக்கின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்றைப் பொருத்தி வைப்பதுதான்

👉பண்டைய சட்ட நூல்கள், அரசன் உழவர்களிடமிருந்து மகசூலில் ஆறில் ஒரு பாகத்தை வரியாகப் பெறவேண்டுமெனக் கூறுகின்றன. இதற்கு ‘சட்பாகம்’ என்று பெயர், அரசனை ‘சட்பாகி’ என்று கூறுவர். 

அரசன் ஏவலால் கூலியின்றி உழைக்க வேண்டிய கடமையை உழவர்களுக்கு நீதி நூல்கள் விதித்தன. இதற்கு “விஷ்டி” என்று பெயர். இதை தமிழில் “வெட்டி” என்று பெயர். இத்தகைய உழைப்புக்கு ஆள் கொண்டு வந்து வேலையை மேற்பார்ப்பவன் “வெட்டியான்” என்று கூறுவர். 

வரி எல்லா இடங்களிலும் ஒரேமாதரி இல்லை. சில இடங்களில் ஆறில் ஒரு பங்காகவும், வேறு சில இடங்களில் மூன்றில் ஒரு பங்காகவும் அல்லது இரண்டில் ஒரு பங்காகவும் இருந்தது.

👉பிராம்மணர்களும், சத்திரியர்களும்தான் கொடுங்கோன்மையை எதிர்க்கும் உரிமை உண்டென்று பிராம்மண நூல்கள் கூறுகின்றன. உழவர்கள் ஆயுதம் தாங்கக் கூடாது என்ற தடையும் இருந்தது. 

👉பாசன வசதிகளைத் தோற்றுவிப்பதில் தமிழர்களின் அக்கறை மெகாலிதிக் காலம் முதலாகவே காணப்படுகிறது. கிராம சபைகளான “ஊர்”, “சபை” நிறுவி நிலங்களை பராமரித்து வந்தனர். 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பிராமனர்களுக்கு அதிக நிலங்கள் தானமாக கொடுக்கும் நடைமுறை தமிழகத்தின்குள் வந்தது. இதன் காரணமாக ஊர் சபைகள் பிராமணர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. 

👉தற்கால மக்கள் தங்களை எதனோடு ஒன்றி நிற்க வேண்டும் என்று பழமையில் தேடுகிறீர்கள். சிதறி கிடக்கும் பல பழமை தன்மையில் ஏதாவதொன்றோடு ஒன்றிக்கொள்கிறார்கள். நாம் பழமையின் பெருமை என்று கூறி வரலாற்றை தவறாக அறிந்து கொண்டிருக்கிறோம். பழமை மேன்மையானது, பொற்காலம் என்ற கருத்தால் பாதிக்கப்பட்டு, சமூக செயல்முறைகளை அறிய முடியாமல் திண்டாடுகிறோம். சமூகம், விஞ்ஞானம் சார்த்த அறிவின் தேடல் நம்மை சிற்றெல்லையில் இருந்து மிட்கும்.


                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham)

 சர்அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunninghamபிறம்பு Jan. 23, 1814, லண்டன்,இறப்பு Nov. 28, 1893



இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர். இவர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்சாரநாத் மற்றும் சாஞ்சி உட்பட இந்தியாவின் பல இடங்களை அகழ்வாராய்ச்சி செய்தார்

1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமேஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்புஇந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியதுஇவர் ஜேம்ஸ் பிரின்செப்புடன் சேர்ந்து இந்தியாவில் தொல்லியல் துறையைத் துவங்க 1840களில் முயற்சித்தார்ஆனால் அப்போது அம்முயற்சி வெற்றிபெறவில்லைபின்னர் இவருடைய திட்டம் லார்ட் கானிங் என்பவரால் 1860 களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்


ஆய்வுகள் :


புத்த சமயத்தைச் சேர்ந்த புனிதப்பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளை ஆராய்ந்தார்இவர் பல புத்தகங்களையும்ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்இவர் பாருத் என்ற இடத்தில் இருந்த புத்த ஸ்தூபத்தை (புத்த சமயவழிபாட்டுச் சின்னம்கண்டுபிடித்துஅதைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்தார்இவர் பாரூத்தில் சேகரித்த சிற்பங்களை கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.


இவர் அசோகருடைய தூண்கள்மற்றும் பிற அசோகர் காலச் சான்றுகள்குப்தர் கால மற்றும் அதற்குப் பிந்தையகாலத் தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடித்தார்பழங்கால நகரங்களான சங்கிஸாசிராவஸ்திமற்றும் கோசாம்பி ஆகிய இடங்களை அடையாளப்படுத்தினார்இவர் சாரநாத்சாஞ்சி மற்றும் புத்த கயை ஆகிய இடங்களில் அகழாய்வுசெய்தார்மேலும் திகவாபில்சார்நாச்னா குத்தரா மற்றும் தேவகர் ஆகிய இடங்களில் உள்ள குப்தர் காலத்தொல்லியல் சின்னங்களையும் மற்றும் ஏரன்உதயகிரி ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார்.


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏