சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham)

 சர்அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunninghamபிறம்பு Jan. 23, 1814, லண்டன்,இறப்பு Nov. 28, 1893



இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர். இவர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்சாரநாத் மற்றும் சாஞ்சி உட்பட இந்தியாவின் பல இடங்களை அகழ்வாராய்ச்சி செய்தார்

1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமேஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்புஇந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியதுஇவர் ஜேம்ஸ் பிரின்செப்புடன் சேர்ந்து இந்தியாவில் தொல்லியல் துறையைத் துவங்க 1840களில் முயற்சித்தார்ஆனால் அப்போது அம்முயற்சி வெற்றிபெறவில்லைபின்னர் இவருடைய திட்டம் லார்ட் கானிங் என்பவரால் 1860 களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்


ஆய்வுகள் :


புத்த சமயத்தைச் சேர்ந்த புனிதப்பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளை ஆராய்ந்தார்இவர் பல புத்தகங்களையும்ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்இவர் பாருத் என்ற இடத்தில் இருந்த புத்த ஸ்தூபத்தை (புத்த சமயவழிபாட்டுச் சின்னம்கண்டுபிடித்துஅதைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்தார்இவர் பாரூத்தில் சேகரித்த சிற்பங்களை கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.


இவர் அசோகருடைய தூண்கள்மற்றும் பிற அசோகர் காலச் சான்றுகள்குப்தர் கால மற்றும் அதற்குப் பிந்தையகாலத் தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடித்தார்பழங்கால நகரங்களான சங்கிஸாசிராவஸ்திமற்றும் கோசாம்பி ஆகிய இடங்களை அடையாளப்படுத்தினார்இவர் சாரநாத்சாஞ்சி மற்றும் புத்த கயை ஆகிய இடங்களில் அகழாய்வுசெய்தார்மேலும் திகவாபில்சார்நாச்னா குத்தரா மற்றும் தேவகர் ஆகிய இடங்களில் உள்ள குப்தர் காலத்தொல்லியல் சின்னங்களையும் மற்றும் ஏரன்உதயகிரி ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார்.


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




No comments:

Post a Comment