புத்தகம்:- அர்த்தசாஸ்திரம் (உலகின் முதல் பொருளாதார நூல்)
ஆசிரியர்:- தாமஸ் ஆர். டிரவுட்மன் (Thomas Trautmann)
தமிழில்:- எஸ். கிருஷ்ணன்
அரசியல் பொருளாதாரம் பற்றிய உலகின் முதல் ஆவணம் என்று அர்த்தசாஸ்திரம் அறியப்படுகிறது. அர்த்தசாஸ்திரம் என்பது செல்வத்தைப் பற்றிய அறிவு. ஓர் அரசன் தனது நாட்டை எப்படி நிர்வகிக்க வேண்டும், குடிமக்களை எப்படி நடத்த வேண்டும், வரிகள் எப்படி விதிக்கப்பட வேண்டும், தானியங்கள் எப்படிப் பங்கிடப்பட வேண்டும், ராணுவ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய ஆசிரியர் என்று கௌடில்யர், சாணக்கியர், விஷ்ணுகுப்தர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
படைப்பின் பெயர் சமஸ்கிருத வார்த்தைகளான அர்த்த ("நோக்கம்"/"இலக்கு") மற்றும் சாஸ்திரம் ("ஒப்பந்தம்"/“புத்தகம்") ஆகியவற்றிலிருந்து வந்தது
அர்த்தசாஸ்திரம், “பொருள்முதல்வாதம்” பார்வைக்கு ஆதரவாகப் பல குறிப்புகள் உள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை நிராகரித்த ‘உலகாயதம்’ (Charvaka) வின் தத்துவப் பள்ளியின் நடைமுறைத்தன்மை தெரிவிக்கப்பட்டுள்ளது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் வரும் முதல் சூத்திரத்தில் இந்த நூல் இதற்கு முன்னிருந்த பொருளாதார நூல்களில் இருந்து உருவாக்கப்பட்டவை என்று கூறுகிறது.
“இந்த ஒன்றுபட்ட அர்த்தசாஸ்திரம், பெரும்பாலும் இதற்கு முன்னிருந்த ஆசிரியர்கள் எழுதிய நிலத்தைக் கைப்பற்றுதல், காப்பது தொடர்பாக எழுதிய பொருளியல் நூலில் இருந்து முடிந்தவரைத் தொகுத்து உருவாக்கப்பட்டது” (1.1.1)
அர்த்தசாஸ்திரத்தின் சிறப்புத்தன்மையே அது அரசரின் ஆளுமைக்குப்பட்ட பகுதிகளில் மதங்களின் பொருட்டோ அல்லது இனங்களின் பொருட்டோ எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்பதுதான்.
அர்த்தசாஸ்திரத்தின் மூன்றாம் அத்தியாயத்தில் கூறியது போல..
“ஒருவரின் சொந்த கடமையை கடைப்பிடிப்பது ஒருவரை ஸ்வர்க்கத்திற்கும் எல்லையற்ற பேரின்பத்திற்கும் (அனந்தியா) இட்டுச் செல்கிறது. அதை மீறினால், சாதிகள் மற்றும் கடமைகளின் குழப்பத்தால் உலகம் அழிந்துவிடும்”
மேலும், புனிதமான இடங்கள், புனிதமில்லாத இடங்கள் என்று எதையும் பிரிக்கவில்லை.
மேலும், மது விற்பனை பற்றி அர்த்தசாஸ்திரத்தில் எந்த மன உறுத்தலோ காட்டவில்லை. மதுவகை நாட்டுக்கு நிலையான வருமானம் ஈட்டித்தந்ததால் அதற்கு அனுமதியளித்தலையே அர்த்தசாஸ்திரம் பரிந்துரைக்கிறது. மது, கசாப்புக்கடை, விலைமாதர்கள், சூதாட்டம் போன்றவற்றிலும் அர்த்தசாஸ்திரம் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறது.
சாணக்கிய நீதிக்கும், மனுவின் ‘மனுநீதி’ நூலுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. மனுவின் நீதியில் சில பொருளியல் அம்சங்கள் உள்ளன ஆனால் அரசாட்சி மதம் சார்ந்த விதமாக மனுநீதி நூல் இயற்றப்பட்டது. சாணக்கியனின் நீதி இதற்கு முன் பிரபலமாக இருந்த ‘பொருள்முதல்வாத்தை’ மையமாகக் கொண்டது என்று கருத வாய்ப்புண்டு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment