நெகனூர்பட்டி பாறை ஓவியங்கள் - விழுப்புரம்
அடுக்காங்கல் கிழ் பக்கத்தில் பாறை ஓவியத் தொகுதி காணப்படுகிறது. வெள்ளை நிறத்தில் ஓவியங்கள்தீட்டப்பட்டிருந்தன இது ஒரு அரிய வகை வெண்சாந்து பாறை ஓவியம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இதில் வெண்சாந்து கொண்டு தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள். பெருங்கற்காலத்தில் (3000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை) வாழ்ந்த மனிதர்களால் தீட்டப்பட்ட ஓவியங்களாகும். செஞ்சாந்து நிறம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள், புதியகற்காலத்தை (5,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை) சேர்ந்தவையாக இருக்கலாம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நாகரிகம் சிறப்பாக இருந்தமைக்கான குறியீடுகள் இந்த ஓவியங்கள் மூலம் தெரிய வருகின்றன. கற்கால மனிதர்களின் கற்பனைத்திறன், சிந்தனையை வெளிப்படுத்தும் தன்மை, பழக்கப்படுத்திய விலங்குகள், பொருள்கள் எனக் கற்கால மனிதர்களின் பண்பாட்டுக் கூறுகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. மனித நாகரிக வளர்ச்சியில் அறுபடாத வரலாற்றுச் சுவடுகள் விழுப்புரம் மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கிடைத்து வருகின்றன. தொல்லியல், மானுடவியல், கலைக்கோட்பாடுகள் எனப் புதிய ஆய்வுகளுக்கு இந்த ஓவியங்களின் கண்டுபிடிப்பு முக்கியப் பங்காற்றுவதாகத் தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment