பீம்பேட்கா பாறை ஓவியங்கள்
பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால(பாலியோலித்திக் காலம்) பாறைஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல்முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன.இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.
கற்கால மனிதன் ஈட்டி முதலிய ஆயுதங்களோடு வேட்டைக்கு புறப்பட்டு செல்லும் ஓவியம், கற்காலங்களில் வில், அம்பு, ஈட்டி முதலிய ஆயுதங்களைக் கொண்டு எப்படி மனிதன் மிருகங்களை வேட்டையாடினான் என்பதை விளக்கும் ஓவியம் மற்றும் மனிதனை மிகப் பெரிய மிருகம் ஒன்று வேட்டையாடும் ஓவியம் என ஆதிகாலத்தை நினைவுகூறுகிறது.
No comments:
Post a Comment