Bao-jia System (பாஜியா அமைப்பு)

 Bao-jia System (பாஜியா அமைப்பு)




சீனாவில் 13-வது நூற்றாண்டில் மக்களை ஒழுங்குபடுத்தவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், வரி வசூலிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் “பாஜியா” அமைப்பு. சீனாவில் 13ம் நூற்றாண்டடில் ஆட்சி புரிந்து மீங் (Ming) மன்னர் இதை நடைமுறை கொண்டு வந்தார். 


இந்த முறைப்படி 10 குடும்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது "ஜியா" என்றும். 100 ஜியாக்களை உள்ளடக்கியது ஒரு "பா" என்றும் உருவாக்கப்பட்டது. இந்த "பா" அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தலைவராக கருதப்பட்டனர். மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்பட உதவியது. இந்தப் 'பா' அமைப்புக்குள் யார் தவறு செய்தாலும், இந்தப் 'பா' அமைப்பில் உள்ள மற்றவர்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம். வரி வசூலிப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தவும் இது பெரிதும் உதவியது. சீன அரசாங்கம் ஒவ்வொரு 'பா'வுக்கும் இவ்வளவு வரி என்று நிர்ணயித்தது. அந்த வரியை வசூல் செய்வது அந்தப் அமைப்பில் இருந்த மூத்த உறுப்பினர்களின் கடமையாக்கப்பட்டது. மூத்த உறுப்பினர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், வரி வசூலிப்பது வரி விதிப்பது தங்களுக்குள் எளிதாக நடந்தது. அரசாங்கம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஊழியரை நியமிக்காமல் "பா" அமைப்பின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டது. 



நீதிதேவன் மயக்கம் - பேரறிஞர் அண்ணா

நீதிதேவன் மயக்கம்” - பேரறிஞர் அண்ணா




அறம் அற்ற, பொறுப்பற்ற, சுயநலம் மிக்க, ஒரு சாராரின் நலன் கருதி இயற்றப்பட்ட இதிகாசமும், எழுதப்பட்ட வரலாறும் நம் மக்கள் மீது பக்தி என்ற போர்வையில் அடிமைத்தனத்தை திணித்தது. இப்படிப்பட்ட திணிப்புகளை மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற பகுத்தறிவின் வெளிப்பாடே பேரறிஞர் அண்ணாவின் “நீதிதேவன் மயக்கம்” என்ற நாடகம்.


அண்ணாவின் நீதிதேவன் மயக்கத்தில் வரும் பாத்திரங்கள் இராவணன், கம்பர், இராமன், சீதை, அகலிகை, அக்கினி, துரோணர், விசுவாமித்திரர், பரசுராமன், வால்மீகி, துரோணர், கோட்புலி நாயனார், ஆகியோர் நடத்திய மனித நேயமற்றவன் கொடுமைகள் அனைத்தும் சமயச் சார்பான நூல்களில் ஞாயம் கற்பிக்கப்பட்டுப் பாராட்டப்படுகின்றன. அவர்கள் வன்கொடுமையை மேற்கொள்ள எந்தவிதமான காரணமும் இல்லை. சான்றாகத் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது. தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கும் அளவிற்கு ‘ஏகலைவன்’ எந்தத் தவறும் செய்யவில்லை.


கோட்புலி நாயனார்’ பதுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளைப் பஞ்சம் பசியால் வாடிய ஏழை மக்கள் எடுத்துச் சென்றனர். அதன் காரணமாகவே அனைவரும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஒரு பச்சிளம் குழந்தைகூட துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. இத்தகு கொடுமைகள் கடவுளின் பெயரால், சாதியின் பெயரால் ஞாயம் கற்பிக்கப்பட்டன. ஆனால் சீதையைச் சிறையெடுக்க இராவணனுக்கு ஒரு காரணம் இருந்தது. தன் தங்கையின் உடலுறுப்புகளைச் சிதைத்த கொடுமையே அக்காரணம். ஆனால் இரக்கமற்ற காரியத்தை செய்த ஆரிய திறவிகள் தேவர்களாகப்பட்டனர், இறக்கமற்ற அவர்களின் செயல்கள் ‘பக்தியின்’ பெயரால் புனிதமாக்கப்பட்டு நியாயமாக்கப்படுகிறது. 


இராமாயணம் - மகாபாரதம் எனும் இதிகாசங்கள் இன ஒடுக்கலை - சுரண்டலை - ஞாயப்படுத்த அமைந்தவை என்பதில் ஐயமில்லை.


                         🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர் எது?!

வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர்


குஷிம் (Kushim)


மெசொப்பொத்தேமியாவில் (Mesopotamia) உள்ள உரூக் (uruk) என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த களிமண் பலகைகள் (Clay tablets) குறிப்பிடப்பட்டுள்ள பெயர்தான் வரலாற்றில் பதிவான முதல் மனிதனின் பெயர். 





இந்த பெயர் ஒரு தனிநபரின் பெயரா அல்லது அலுவலக உரிமையாளரின் பெயரா அல்லது பொதுவான தலைப்பு அல்லது ஒரு நிறுவனத்தைக் குறிக்கிறதா என்பது நிச்சயமற்றது.


ஆனால் இந்தப் பெயர் சுமார் கிமு 3000 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட களிமண் பலகைகளில் பொறிப்பட்டுள்ளது. அதில் "29,086 அளவு பார்லி 37 மாதங்கள் குஷிம்" என்று எழுதப்பட்டுள்ளது. இதை "குஷிம்" என்பவர்கை யெழுத்திட்டதாக விளக்கலாம்.


வரலாற்றில் நமக்குத் தெரிந்த முதல் நபரின் பெயர் ஒரு ராஜாவோ அல்லது ஒரு போர்வீரனோ அல்லது ஒருவேளை பிரபல அறிஞரோ அல்லது கடவுளின் பெயரோ அல்ல..இந்த  குஷிம் என்பவர் ஒரு கணக்காளர் (accountant) என்பது மட்டும் தெளிவு. 

கு-ஷிம் (KUS-HIM)



7,000 ஆண்டுகளுக்கு மேலான கணக்கியல் பதிவுகள் மெசொப்பொத்தேமியாவில் (Mesopotamia ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் பண்டைய மெசபடோமியாவின் ஆவணங்கள் செலவுகள் மற்றும் பெறப்பட்ட மற்றும் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்களைக் காட்டுகின்றன.


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏