Bao-jia System (பாஜியா அமைப்பு)
சீனாவில் 13-வது நூற்றாண்டில் மக்களை ஒழுங்குபடுத்தவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், வரி வசூலிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் “பாஜியா” அமைப்பு. சீனாவில் 13ம் நூற்றாண்டடில் ஆட்சி புரிந்து மீங் (Ming) மன்னர் இதை நடைமுறை கொண்டு வந்தார்.
இந்த முறைப்படி 10 குடும்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது "ஜியா" என்றும். 100 ஜியாக்களை உள்ளடக்கியது ஒரு "பா" என்றும் உருவாக்கப்பட்டது. இந்த "பா" அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் தலைவராக கருதப்பட்டனர். மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்பட உதவியது. இந்தப் 'பா' அமைப்புக்குள் யார் தவறு செய்தாலும், இந்தப் 'பா' அமைப்பில் உள்ள மற்றவர்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம். வரி வசூலிப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தவும் இது பெரிதும் உதவியது. சீன அரசாங்கம் ஒவ்வொரு 'பா'வுக்கும் இவ்வளவு வரி என்று நிர்ணயித்தது. அந்த வரியை வசூல் செய்வது அந்தப் அமைப்பில் இருந்த மூத்த உறுப்பினர்களின் கடமையாக்கப்பட்டது. மூத்த உறுப்பினர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், வரி வசூலிப்பது வரி விதிப்பது தங்களுக்குள் எளிதாக நடந்தது. அரசாங்கம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஊழியரை நியமிக்காமல் "பா" அமைப்பின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டது.
No comments:
Post a Comment