காலம்:- கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு
இடம்:- விழுப்புரம் பொதுப்பணித் துறை அலுவலகம்
- முகையூரு மேற்சே,
- ரிகு யாடிக,
- ருகிய கோழி
முகையூர் மேற்சேரிக்கு; யாடி கருகிய கோழி
விளக்கம்:-
“முகையூரில் மேல் சேரி என்னும் இடத்தில், சண்டையிட்டு இறந்த கோழி”
ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. நடுகல், கந்து எனும் கல்தூண் தொடங்கிய நம் வழிபாடுகள். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் போர்ச் சேவல்களைச் சிறப்பிக்கும் சான்றுகள் உள்ளதுபோல் தமிழகத்திலும் பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்று அரசலாபுரம் கோழி நடுகல்.
கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு முதல், தமிழ் பிராமி எழுத்து முறையிலிருந்து பிரிந்து வட்டெழுத்து முறையாக மாறத்தொடங்கியது. இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கோழிக்கான நடுகல்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏