திரிகடுகம் மற்றும் சிறுபஞ்சமூலம் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்)

 திரிகடுகம்




திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்ஆதனார் என்பது இயற்பெயர்.‘நல்’ என்பது அடைமொழிஇது நூறு வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்து உடைய நூல்
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி

என்னும் மூன்று மருந்துகளையும் தனித்தனியே பொடி செய்துஇப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்துஅமைக்கப்பட்ட மருந்து “திரிகடுகம்” என்பது

இந்த திரிகடுகத்தை சூரணம் என்றும் கூறுவர்இது காரமாக இருக்கும்இதனால் திரிகடுகம் (மூன்று காரமான- பொருள்என்று பெயர் பெற்றதுஇதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும்திரிகடுகமாகிய சுக்குமிளகுதிப்பிலியைச் சமனளவாகச் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம்திரிகடுகம் கியாழமும்சூரணமும் உடல் நோயைப் போக்குவதுபோல, திரிகடுகம் என்னும் இந்நூலைப் படித்தாவரின் உள்ள நோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால், இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது. 


ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.  உதாரணத்திற்காக திரிகடுகத்தின் இரு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது 


6-ஆவது பாடல்


“பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்

திறன்வேறு கூறிற் பொறையும்அறவினையைக்

காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்க”


விளக்கம்:- பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும்தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும்மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மை.


49-ஆவது பாடல்


கணவன்மனைவிமக்கள் அடங்கியது குடும்பம்நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன். குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்குபெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும்அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள்ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர்இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன்செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார்


ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது 
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி 
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் 
இம்மைக் குறுதியில் லார


விளக்கம்:- தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறதுஎனவேநல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களேஅவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக்சொல்லி விளக்கும் பாடல்.


சிறுபஞ்சமூலம்:


சிறுபஞ்சமூலம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்இந்நூல் ஆசிரியர் காரியாசான்இந்நூல் நூற்றிரண்டு செய்யுட்களையும் இரண்டு சிறப்புப் பாயிரச் செய்யுட்களையும் உடையதுபஞ்சமூலம் என்பது ஐந்துவகையான வேர்கள்அவை

  1. கண்டங்கத்திரி வேர்
  2. சிறுவழுதுனை வேர்
  3. சிறுமல்லி வேர்
  4. பெருமல்லி வேர்
  5. நெருஞ்சி வேர்

என்பவை.


இந்த ஐந்து வேர்களைக் கொண்டு சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து செய்யப்படு நோயாளிகளுக்கு தரப்பட்டது


இந்த சிறு பஞ்சமூலம் என்னும் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து பொருள்கள் கூறப்படுகின்றனஇவை உடல் நோயைத் தீர்க்கிற சிறு பஞ்சமூலம் போன்று மனநோயைத் தீர்ப்பன

ஆகையால் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது.


                                                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




சீவக சிந்தாமணியில் வரும் பல்லவ தேசம் எது??!!

சீவக சிந்தாமணியில் வரும் பல்லவ தேசம் எது??!!



களப்பிர்ர் ஆட்சிக் காலத்தில் கிபி 250 முதல் கிபி 575 வரையில் பல தமிழ் இலக்கிய நூல்கள் உண்டாயின என்பதற்கு முழு விவரங்கள் கிடைக்கவில்லைஇருந்தபோதிலும்சமண முனிவரான “திருத்தக்க தேவர் அவர்கள் நரி விருத்தம் மற்றும் சீவக சிந்தாமணியை இயற்றினார்சோழ அரசர் குலத்தில் பிறந்தவரான திருத்தக்க தேவர் சமணசமயத்துத் துறவியாகிக் சமண சமயத்துத் தேவகணத்தைச் சேர்ந்தார்இவர் “சீவகன்” என்னும் அரசனுடைய வரலாற்றை “சீவக சிந்தாமணி” என்னும் பெயரினால் பட எண்ணித் தம்முடைய சமய குருவின் அனுமதியைக் கோரினார்சீவகன் சரிதையில் சிற்றின்பச் செய்திகளும் அதிகமாக இருப்பதால் அதை எழுத முன்வந்த திருத்தக்கதேவர் தம்முடைய துறவு நிலையால் உறுதியுள்ளவராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்பின் குருஇவரை முதலில் நிலையாமையைப் பற்றி ஒரு நூல் எழுதிக் காட்டும்படி கட்டளையிட்டார்அவர் கட்டளையை மேற்கொண்டுஎழுதப்பட்டதுதான் “நரி விருத்தம்”.


நரி விரித்தத்தை படித்த ஆசிரியர் திருத்தக்கத் தேவரின் உறுதியான துறவு நிலையை யறிந்துசீவக சிந்தாமணிக் காவியத்தை இயற்றுவதற்கு அனுமதி கொடுத்தார்ஆகவேநரி விருத்தம் சீவக சிந்தாமணிக்கு முன்னோடுயாகச் செய்யப்பட்ட நூல் என்பது தெரிகிறதுநூறு செய்யுட்களைக் கொண்ட நரி விருத்தம் இப்பொழுதும் இருக்கிறது.


சீவக சிந்தாமணி:-


சீவக சிந்தாமணி என்றும் மணநூல் என்றும் பெயர் பெற்று விளங்குகிறதுசீவக சிந்தாமணிசிலப்பதிகாரக் காவியத்துக்கு அடுத்தபடிசிறந்த காவியமாகப் போற்றப்படுகிறதுபுதிய விருத்த யாப்பினால் இயற்றப்பட்ட முதல்காவியம் இது


சீவக சிந்தாமணியின் தலைவனான சீவக்குமாரன் வர்த்தமான மகாவீர்ரின் காலத்தில் இருந்தவன்மகாவிர்ர் நிருவாண மோட்சம் அடைந்து இப்பொழுது 2500 ஆண்டுகள் ஆகின்றனஎனவேசீவகனும் அந்தக் காலத்தில் இருந்தவன் ஆவான்


இவ்விடத்தில் ஒரு செய்தியை விளக்கிக் கூற வேண்டும்சீவக குமாரன்பல்லவ தேசத்தின் மகளை மணஞ் செய்தான் என்று கூறப்படுகிறான்பல்லவ தேசம் என்பது எது என்பதை அறிய வேண்டும்பல்லவ மன்னர் தமிழ்நாட்டுத் தொண்டை மண்டலத்தைக் கிபி 6ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பாக அரசாண்டதை வரலாற்றினால் அறிகிறோம்


கிமு 6 நூற்றாண்டிலிருந்த சீவகன் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்த பல்லவ அரசன் மகளை மணஞ்செய்யஇயலுமா??!!


படுமழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும்தடமலர்க் குவளை பட்டந் தழுவிய யாணர் நன்னாடு” (1185)

கோங்கு பூத்து திர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்தபாங்கமை பரும யானைப் பல்லவ தேச மன்னன்” (2253)

பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேயமன்னன்சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானே” (2278)

என்றும் பல்லவ தேசமும் பல்லவ தேயமன்னனும் சீவக சிந்தாமணியில் கூறப்படுகின்றனர்இங்கு கூறப்பட்ட பல்லவதேசம் தமிழ்நாட்டில் பல்லவதேசம் அல்லசீவகன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவதேசமும் பல்லவ அரசரும் இருந்தில்லர்இதில் கூறப்படுகிற பல்லவ தேசம் இப்போது “ஈரான்” என்று பெயர் கூறப்பட்டுகிற பழைய பாரசீகதேசமாகும்பழைய பாரசீக தேசத்தை ஆண்டவர் “பஃலவர்” என்றும் அந்த நாடு பஃவல நாடு என்றும் கூறப்படுகிறதுபஃலவர் தேசம் என்றது தமிழில் பல்லவ தேசம் என்றாயிற்றுசீவக சிந்தாமணி கூறுகிற பல்லவ தேசம் பழைய பாரசிக நாடாகிய பஃலவ தேசம் ஆகும்


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


சாக்கிய நாயனார் - சிவனை கல்லெறிந்து வழிபாடு செய்தவர்

 சாக்கிய நாயனார்



அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார்இவர் தொண்டைநாட்டில் திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தார்கி.பி 7ஆம் நூற்றாண்டு வாழ்ந்த திருநாவுக்கரசருக்கு சில நூற்றாண்டு முன்பு வாழ்ந்தவர்

பிறப்பு - இறப்பு என்று அடுத்தடுத்து ஏற்படும் நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டிஅதற்கு உரிய மார்க்கம் எதுவென அறியும் பொருட்டுஅவ்வமயம் காஞ்சியில் வாழ்ந்து வந்த பௌத்த சமயத் தலைவர்களை அணுகினார்பௌத்தர்கள் தமிழகத்தில் "சாக்கியர்கள்என்று அழைக்கப்பட்டார்கள்அதனால் சாக்கியர்களை அடைந்த நாயனாரும் "சாக்கியர்என்ற பெயரில் விளங்கினார்.

பின்னாளில்தான் விரும்பிய மார்க்கத்தை அடைய இந்து சமயத்தின் சைவநெறியே உண்மையான நெறி என்று கண்டுகொண்டார். "எந்த நிலையில் ஒருவர் நின்றாலும்எந்த கோலத்தைக் கொண்டாலும்நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும்எனத் துணிந்துபுத்தபிட்சுவுக்குரிய உடை முதலியவற்றை நீக்காமலேயே, "நாள்தோறும் சிவலிங்கத்தை வணங்கிய பின்பே உணவு உண்ண வேண்டும்என்ற நியமத்தை தீவிரமாகப் பின்பற்றி வந்தார்

ஒரு நாள் ஒரு புதிய இடத்தில் சிவலிங்கத்தினைக் கண்டார்பேரானந்தம் அடைந்தார்இன்னது செய்கிறோம் என்று அறியாதவராகிபக்கத்தில் இருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அதனையே மலராகப் பாவித்து சிவலிங்கத்தின் மீது அர்ச்சிப்பது போல் எறிந்தார்சிவபெருமானும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டார்பின்வரும் நாள்களிலும் இச்செயலையே தொடர்ந்தார்.


ஒருநாள் இறைவன் திருவருளால் வழக்கத்தை மறந்து  உண்ணத் தொடங்கியவர், "எம்பெருமானைக் கல்லெறிந்து வழிபட மறந்தேனேஎன்று பதறியவராய் உண்ணாமல் எழுந்து விரைந்து சென்று வழக்கம் போல் கல்லை எறியஅக்கணமே சிவபெருமான் உமாதேவியுடன் காட்சியருளினார்.  ஈசனின் அருட்பார்வையில் சாக்கிய நாயனாரின் பிறவித்தளை நீங்கியதுபெறுவதற்கு அரிய மோட்சம் அவருக்கு கிட்டியது

திருமுறைகளும் சாக்கிய நாயனார் புகழைப் பெரிதும் போற்றுகின்றன. "கல்லாலெறிந்த பொல்லாப் புத்தன்நின்னினைந்து எறிந்த அதனால் - அன்னவன் தனக்கும் அருள் பிழைத்தின்றேஎன்று பட்டினத்து அடிகள் தனது திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் அருளியுள்ளார்


சாக்கிய நாயனார் வரலாற்றுடன் தொடர்புடைய திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் (வீராட்டகாசம்), பெரியகாஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளதுகொங்கண முனிவர் வழிபட்ட தலம்இங்குள்ள சிவலிங்கத்தின் மீதுதான் கல்லெறிந்து வழிபட்டார் சாக்கிய நாயனார் என்பர்அவர் முக்தி பெறுவதற்கு முன்கடைசியாக எறிந்த "கல்பக்தர்கள் வழிபட ஏதுவாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும்.

தெய்வத்தின் அன்புக்கு ஓர் உதாரண புருஷராக விளங்கிய சாக்கிய நாயனாரின் குருபூஜைஇத்திருக்கோயிலில் வரும்செவ்வாய்க்கிழமை (ஜனவரி -12)  மார்கழி - பூராடம் நட்சத்திரத்தில் நடைபெறவுள்ளது.