அறநெறிச்சாரம் என்பது ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன. முனைப்பாடியார் தொண்டை மண்டல கெடிலம் ஆறு அருகில் உள்ள திருமுனைப்பாடியில் வாழ்ந்த புலவர் எனத் தெரிகிறது.
“பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்.” - 44
விளக்கம்:-
சூரியனை கையில் இருக்கும் சிறிய குடை மறைக்கும். யாம் பல நூல்கள் கற்றோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாகாது.
பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்களுக்கும் அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல் சில நூல்களைப் பயின்றாரிடத்து இருப்பதும் உண்டு
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment