சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள்

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !


ரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்துச் சமவெளி நாகரிக (Indus Valley Civilisation – IVC) மக்களின் மரபு வழிஅடையாளம் குறித்த மர்மம் மற்றும் சர்ச்சைகளுக்கு கடந்த வியாழனன்று (05-09-2019) வெளியிடப்பட்ட இரண்டு மரபணு ஆய்வுகள் மறுக்கவியலாத பதிலை அளித்துள்ளன


ஹரியானா மாநிலத்தின் ராக்கிகர்ஹி என்ற இடத்தில் வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக கால நகரம் இருந்துள்ளதுஅவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் ஆண்பெண் இருவரின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்அதில் பெண்ணின் எலும்பை மரபணுஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்இவ்வாய்வறிக்கை செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.


👉 சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை

👉 பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதிய கற்காலஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

👉 சிந்துச் சமவெளி மக்களிடம் ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை

👉 சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே ஈரானில் இருந்து வந்து இந்திய மூதாதையினருடன்கலந்தனர் என்றும்இவர்களே பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டு சிந்துச்சமவெளி நாகரிகமாக வளர்ச்சியடைந்தனர் 


சிந்துச்சமவெளி நாகரிகம் வேத (ஆரியநாகரிகம் அல்ல என்பதும் உறுதியாகிவிட்டது


👉 “தற்கால வட இந்தியர்களிடம் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பங்களை பயன்படுத்தும் இந்தியபுரோகித சமூகங்களில் (குறிப்பாக பார்ப்பனபனியா மேல்சாதியினர்இந்த ஸ்டெப்பி வம்சாவளி மரபணு மிகஅதிகமாகக் காணக்கிடைக்கிறது” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு


👉 இன்றைய நவீன இந்தியர்கள் அனைவருமே வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI)  மற்றும்  தென்னிந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI) ஆகிய இரு வம்சாவளியின் வழித்தோன்றல்களேஇவ்விரு வம்சாவளியினரும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னரே தோன்றினர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.


வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI):- சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகுஅம்மக்கள் வடமேற்கில் இருந்த இனக்குழுக்களுடனும் மற்றும் ஸ்டெப்பி வம்சாவளியுடனும் கலந்து ‘வடஇந்தியமூதாதையர்’ உருவாகினர்.



தென்இந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI):- சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகுஅம்மக்கள் தென்னிந்திய மூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்து ‘தென்இந்திய மூதாதையர்’  உருவாகினர்





👉 தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் இந்த ஆய்வு விடையளித்துள்ளதுதென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிடமொழிகளுக்கும் இடையில் உள்ள இணையுறவை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள்சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவிமிக ஆதிகால தென்னிந்தியமூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்தனர்இவர்கள்ஆரம்பகால திராவிட மொழிகளைப்பேசியிருக்கக்கூடும்” என்கிறது Science இதழில் வெளியான ஆய்வறிக்கை


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


நன்றி :- https://www.vinavu.com/2019/09/10/indus-valley-civilization-new-dna-evidence-clears-that-aryans-are-migrants/




ஸ்வீடனில் உள்ள டானுமில் (Tanum) வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

ஸ்வீடனில் உள்ள டானுமில் (Tanum) வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்


ஸ்வீடனின் போஹுஸ்லான் பகுதியில் டானும் (Tanum) அருகே உள்ள வெண்கல கால (Bronze Age) பாறை ஓவியங்கள் உள்ளது. இது யுனெஸ்கோவின் உலக கலாச்சார பாரம்பரியம் ஆகும்







டானும் உள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்கலக் காலத்திலும் இரும்புக் காலத்தின் ஆரம்ப காலத்திலும் செய்யப்பட்டவை - இவ்வாறு கிமு 1700 மற்றும் கிமு 200 க்கு இடையில்


படகுகள் மற்றும் ஆயுதங்களின் வெவ்வேறு மாதிரிகள்அதே போல் விலங்குகளின் தோற்றம் ஆகியவை படைப்புகளை தேதியிட உதவுகின்றன


'டானம் பாறை ஓவியங்கள்'600 க்கும் மேற்பட்ட பாறைகளில் 1000 படங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறதுஇது 25 கிமீ நீளத்தில் வெவ்வேறு பகுதிகளில் குவிந்துள்ளது.






சுமார் 4,000 கி.முதெற்கு ஸ்காண்டிநேவியாவில் ஒரு புதிய கலாச்சார காலம் எழுந்தது - புதிய கற்காலம் என்று அழைக்கப்படுகிறதுஇந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கிலிருந்து ஸ்காண்டிநேவியப் பகுதிக்கு விவசாயம்முதன்முதலில் வரத் தொடங்கியது.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சம்புகன் கதை என்ன ?

சம்புகன் கதை என்ன?



இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார்.

அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன்.

வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் .
"ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் .
ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் .
எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.

மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா அப்படி என்ன நடந்தது என்று தேவலோக ஞானிகளையும் அழைத்து கேட்கிறார்.
அந்த ஆலோசனை சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் கூறினார்.

" ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாயு .அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளையின் அகால மரணம் ஏற்பட்டுள்ளது என்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம் ".
மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர் கூறினார் .
" சூத்திரர்கள் யாரேனும் வேதம் தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் . சூத்திரர்கள் கற்பதும் தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும் .. இந்த யுகத்தில் நடக்காது . அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது .அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும் "என்றார் நாரதர்.

உடனே தன் வில் அம்பு வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டு விடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான் .

கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் சரயு நதிக் கரையில் வியக்கத்தக்க தேஜஸுடன் ஒருவர் தலைகீழாக நின்று உக்ர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விமானத்தை இறக்கி அவர்.அருகில் சென்று

" தவசிரேஷ்டரே நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள் ?" என்று கேட்க
தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார் .

"என் பெயர் சம்புகன் . நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன் ." நீங்கள் யார் ?
என்று கேட்கிறார் சம்புகன் .

நான் ஸ்ரீ ராமச்சந்திரன் . இத்தவம் செய்யும் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் ? பிரா மணரா அல்லது ஷத்திரியரா ? வைசியரா இல்லை சூத்திரரா சொல்லுங்கள் என்று கேட்க ,

சம்புகன் கூறினார் ஸ்ரீ ராமச்சந்திர பிரபு நான் உம்மைக் கண்டது என் பேறு .
நான் " சூத்திர யோனியில் பிறந்தவன் "
என்றார் சம்புகன்.

அதைக்கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது ராமன்

" அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும்”

என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினான் .

சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்த உடன் வானுலகில் இருநது தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர் .

அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான் .
அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார் .

இவ்வாறாக ஸ்ரீ இராமர் தனது ஆட்சியில் தர்மத்தை நிலை நாட்டினார்.

இதுவே சம்புகன் கதை .!!

#தோழர்_அருள்மொழி ❤️❤️