ஓரை (தமிழ்) மற்றும் ஹோராவும் (கிரேக்க- சமஸ்கிருதம்) ஒன்றா?

 ஓரை (தமிழ்) மற்றும் ஹோராவும் (கிரேக்கசமஸ்கிருதம்)



ஓரையும் ஹோராவும் ஒன்றா? ஒலி வடிவில் ஒன்றுபோலத் தோன்றுகிற இரண்டு சொற்களும் ஒன்றுதானாகி.மு.நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தொல்காப்பியர்கி.பி.5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் வழங்கிய ஹோராவைஎப்படி எடுத்திருக்க முடியும்ஹோராதான் ஓரை ஆயிற்றாஓரை என்பது வேறுஹோரா என்பது வேறு அல்லவாகுதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று கூறினானாமே ஒரு மேதைஅது போன்றல்லவா இருக்கிறது இது!


ஓரை என்னும் தமிழ்ச் சொல் வேறுஹோரா என்னும் கிரேக்கசமஸ்கிருதச் சொல் வேறுஒலி வடிவில் இரண்டும் ஒரே சொல்லைப் போலக் காணபட்டாலும் இரண்டுக்கும் பொருள் வெவ்வேறுஹோரா என்னும் கிரேக்கச் சொல்லுக்குஇராசி அல்லது முகுத்தம் என்று வான நூலில் பொருள் கூறப்படுகிறதுஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர்கூட்டம் (ஆயம்என்பது பொருள்பழைய சொற்கள் சிலவற்றின் பொருள் மறைந்து போய்விட்டது போல ஓரையின் பொருளும் பிற்காலத்தில் மறைந்து போயிற்றுமிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் இச்சொல்லின் பழைய பொருளை (கருத்தைஅறியாமல்இதை ஹோராவின் திரிபு என்று கருதித் தவறான உரையை எழுதிவிட்டனர்.


மறைத்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோர்க் கில்லை

(தொல்.பொருள் 135)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்குப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் எழுதிய பிழையான உரைகளைக் காண்கஉரையாசிரியர்கள் காட்டிய தவறான வழியில் சென்ற சிவராசரும் வையாபுரியாரும் இவ்வாறு தவறான கருத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லைஇதற்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியுள்ள நேரான உரை காண்க (சோமசுந்தர பாரதியார்,‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, அண்ணாமலைப்பல்கலைக்கழக இதழ்ஆறாம் தொகுதிபக். 142 143. இதே கருத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளகட்டுரையிலும் காணலாம்: (Journal of the Annamalai University, Vol. VI, p. 138). ஓரை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் பாரதியார் அவர்கள் கூறும் விளக்கம் வருமாறு:-


“ஓரை - விளையாட்டென்பதுசங்க இலக்கியம் முழுவதும் அச் சொல்லுக்கு அப்பொருளாட்சியுண்மையால் விளங்கும்ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதிலேனும் சான்று காணுதலரிதுமிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவுஎன்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார்அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், ‘ஓரை’ என்னுந் தனித் தமிழ்ச் சொல்லுக்குஅக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக்கொள் ளுவதே முறையாகும்அதை விட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும்பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும்அதற்கு மேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம்அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சியறத்திற்கும் பொருந்தாது.”


ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியாரவர்கள் விளையாட்டு என்று பொருள்கூறியுள்ளார்இது அச்சொல்லுக்கு மிக அண்மையான பொருளேஇதற்குச் சரியான பொருள் சிறுவர் சிறுமியர் வாழும்இடம் என்று தோன்றுகிறதுபழங்காலத்துத் திராவிட இனத்தார் தாங்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள சிறுவர்கூட்டத்தையும் சிறுமியர் கூட்டத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இடங்களில்வைத்து வளர்த்தார்கள்வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களும் இவ்வாறு சிறுவர் சிறுமியரை வெவ்வேறாகப் பிரித்து வைத்துள்ள இடத்துக்கு ஓரை என்று பெயர் கூறினார்கள் என்று தெரிகிறது.

வடஇந்தியாவிலும் ஆதிகாலத்தில் திராவிட இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள்அந்தத் திராவிடர் இக்காலத்தில் ஆரியரோடு கலந்து மொழிகலைபண்பாடுகளில் மாறிப் போனார்கள்அவர்களில் சில இனத்தார் இன்றும் உள்ளனர்அவர்கள் தங்கள் பழைய இடங்களிலிருந்து துரத்தப்பட்டு வேறு இடங்களில் போய் வாழ்கிறார்கள்அவர்களில் முண்டா என்னும் திராவிட இனத்தார் சோட்டா நாகப்பூரில் இருக்கிறார்கள்அவர்களுடைய திராவிட மொழியில் இக்காலத்தில் மைதிலிவங்காளிஇந்தி முதலான மொழிகளின் சொற்களும் கலந்துவிட்டனஆனாலும்பழைய திராவிட இனத்தவரின முண்டாரி மொழியில் ஓரை என்னும் சொல் இன்றும் வழங்குகிறதுஇது ஹோரா என்னும் சொல்லின் திரிபு அன்றுபழைய திராவிடச் சொல்லாகும்முண்டா இனத்து மணமாகாத இளைஞர்களும் மணமாகாத இளம் பெண்களும் தங்கள் வீடுகளில் படுத்து உறங்குவதில்லைஅவர்களுக்கென்று தனித்தனியே பெரியகொட்டகை அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகையில் போய்ப் படுத்து உறங்குகிறார்கள்இந்தக் கொட்டகைகளுக்கு கிதிஓரா என்று அவர்கள் பெயர் கூறுகிறார்கள்ஆண் மக்களுக்குத் தனியாகக் கிதிஓராவும் இருக்கின்றனமுண்டாரிமொழியின் கிதிஓராவுடன் தமிழ் மொழியின் ஓரையை ஒப்பிட்டு நோக்குககிதிஓரா என்பதில் கிதி என்பதன் பொருள் தெரியவில்லைஓரா என்பது ஓரை என்பதில் சற்றும் ஐயமில்லை. எனவேஓரை என்பது திராவிட இனமொழிச் சொல் என்பது தெளிவாகத் தெரிகிறதுதொல்காப்பியர் இந்த ஓரையைத்தான் கூறியுள்ளார்இந்த ஓரை கிரேக்க - சமஸ்கிருத ஓரை அன்று.

மிகப் பழங்காலத்திலேயே திராவிட இனமக்கள் வாழ்ந்த ஊர்களில் சிறுவர்களுக்குத் தனியாகவும் சிறுமிகளுக்குத்தனியாகவும் ஓரா (ஓரைஎன்னும் பெரிய கொட்டகைகளை அமைத்திருந்தனர் என்பது தெரிகிறதுஇக்காலத்தில் பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுபற்றியும் ஆராய்ந்தால் உண்மை கிடைக்கும்தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்த் திராவிடர்கள் தங்கள் இளைஞர் களுக்கும் மகளிர்க்கும் தனித்தனி ஓரைகளைக்கட்டி வைத்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிற ஓரை என்னுஞ் சொல்லிலிருந்து ஊகிக்கலாம்சங்கச்செய்யுட்களில் ஓரை (ஓராஎன்னுஞ் சொல் காணப் படுகிறதுசங்கப் புலவரான உலோச்சனாரும் ஓரை என்னுஞ்சொல்லை ஆள்கிறார். “ ஓரை மகளிரும் ஊரெய்தினரே” (நற்றிணை 398: 5) என்று அவர் கூறுவது காண்கஆகவேசிவராசபிள்ளையும் வையாபுரிப்பிள்ளையும் மற்றவர்களும் தவறாகக் கருதுகிறபடி ஓரை என்னுஞ் சொல் கிரேக்க - சமஸ்கிருதச் சொல் அன்றுஅது தூய திராவிட மொழிச் சொல் என்பதை அறிகிறோம்ஓரை என்னும் திராவிடச்சொல்லின் பழமையை அறியாத சிவராசர்களும் வையாபுரியார்களும் ஓரையைக் கூறுகிற தொல்காப்பியரை மிகமிகப்பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று கூறுவது வரலாறு அறியாத போலிவாதம் ஆகும்திராவிடஇனத்து மக்கள் பழங்காலத்தில் வழங்கிவந்த ஓரா ஓரையைக் கூறுகிற தொல்காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில்இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது


நன்றி:- மயிலை சீனி வேங்கடசாமி 


https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=139



                     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


திரிகடுகம் மற்றும் சிறுபஞ்சமூலம் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்)

 திரிகடுகம்




திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்ஆதனார் என்பது இயற்பெயர்.‘நல்’ என்பது அடைமொழிஇது நூறு வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்து உடைய நூல்
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி

என்னும் மூன்று மருந்துகளையும் தனித்தனியே பொடி செய்துஇப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்துஅமைக்கப்பட்ட மருந்து “திரிகடுகம்” என்பது

இந்த திரிகடுகத்தை சூரணம் என்றும் கூறுவர்இது காரமாக இருக்கும்இதனால் திரிகடுகம் (மூன்று காரமான- பொருள்என்று பெயர் பெற்றதுஇதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும்திரிகடுகமாகிய சுக்குமிளகுதிப்பிலியைச் சமனளவாகச் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம்திரிகடுகம் கியாழமும்சூரணமும் உடல் நோயைப் போக்குவதுபோல, திரிகடுகம் என்னும் இந்நூலைப் படித்தாவரின் உள்ள நோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால், இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது. 


ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.  உதாரணத்திற்காக திரிகடுகத்தின் இரு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது 


6-ஆவது பாடல்


“பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்

திறன்வேறு கூறிற் பொறையும்அறவினையைக்

காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்க”


விளக்கம்:- பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும்தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும்மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மை.


49-ஆவது பாடல்


கணவன்மனைவிமக்கள் அடங்கியது குடும்பம்நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன். குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்குபெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும்அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள்ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர்இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன்செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார்


ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது 
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி 
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் 
இம்மைக் குறுதியில் லார


விளக்கம்:- தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறதுஎனவேநல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களேஅவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக்சொல்லி விளக்கும் பாடல்.


சிறுபஞ்சமூலம்:


சிறுபஞ்சமூலம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்இந்நூல் ஆசிரியர் காரியாசான்இந்நூல் நூற்றிரண்டு செய்யுட்களையும் இரண்டு சிறப்புப் பாயிரச் செய்யுட்களையும் உடையதுபஞ்சமூலம் என்பது ஐந்துவகையான வேர்கள்அவை

  1. கண்டங்கத்திரி வேர்
  2. சிறுவழுதுனை வேர்
  3. சிறுமல்லி வேர்
  4. பெருமல்லி வேர்
  5. நெருஞ்சி வேர்

என்பவை.


இந்த ஐந்து வேர்களைக் கொண்டு சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து செய்யப்படு நோயாளிகளுக்கு தரப்பட்டது


இந்த சிறு பஞ்சமூலம் என்னும் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து பொருள்கள் கூறப்படுகின்றனஇவை உடல் நோயைத் தீர்க்கிற சிறு பஞ்சமூலம் போன்று மனநோயைத் தீர்ப்பன

ஆகையால் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது.


                                                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏