சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்





ஆர்பாலகிருஷ்ணன் திராவிடவியல் ஆய்வாளருமாவார்ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சிஆணையராகவும் பணியாற்றி ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளார். 

அய்யா அவர்கள் எழுதிய “சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்” என்ற கட்டுரையை இங்கே கொடுத்துள்ளோம்


மானுட வரலாறு என்பது பயணங்களால்இடப் பெயர்வுகளால் ஆனதுமனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போதுஅவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்புதிய இடத்தில் குடியேறும்போதுபழைமையுடன் தொடர்புகொள்ளும்விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான்இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல்அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும்சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.

👉 ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள்அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

👉 பின்னர்தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கிபழனிகுமுளிதேனிதேக்கடிகம்பம்போடி போன்ற ஊர்ப்பெயர்கள்மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.

👉 இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமைஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.


சுமார் 9ஆண்டுகளுக்கு முன்ஒரு நாள் இரவுசிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதையபாகிஸ்தான்ஆப்கானிஸ்தான்கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்துஅவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்றுதேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும்பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினிமுதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.

அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன்அதுவும் அங்கே இருந்ததுஎனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.

தொண்டிமுசிறிமதிரை(மதுரை), பூம்புகார்கோவலன்கண்ணகிஉறைநாடுபஃறுளி… என பழந்தமிழ்இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன்நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள்இப்போதும் பாகிஸ்தானில்ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கிபின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல்மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதுஅந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்அவர்கள் என்ன மொழிபேசினார்கள்ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானதுயாருக்கும் தெரியாதுஆனால்அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.

எனில்சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும்சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான்


சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்ததுதமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளனஅதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியைபின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.


பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன்கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்லசங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.



இடப்பெயர்வு நடந்திருக்கலாம்அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம்கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின்மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியைதனி அடையாளங்களை இழந்திருக்கலாம்ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம்அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம்கொற்கைவஞ்சிதொண்டிகாஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.


சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லைஅவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள்அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்லஅவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும்கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத்பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்குஇந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும்என்றும் சங்க இலக்கியம் சொல்கிறதுஇன்று இந்த யாக் விலங்கின் பால்ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும்அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம்எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள்கதைகள்தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.




வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறதுஆனால்அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார்மா என்பது விலங்குகளைக் குறிக்கும்பொதுச் சொல்கி.பி.535 வாக்கில் இந்தியாஇலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.


தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்றுநம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லைஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார்இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்திதொல்காப்பியர்ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார்உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம்பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றனமணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.


இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரிகொங்கணம் அதாவது கோவாமகாராஷ்டிரப் பகுதிஇப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக்கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆகசிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.


தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும்சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவைஅவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றனபிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள்இந்திய வரலாற்றை உண்மையின்ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.


நன்றி  : ஆர் பாலகிருஷ்ணன்