பெண் தர மறுத்ததால் பழங் குடிக்கும் ‘வம்ப வேந்தர்களுக்கும்’ போர்

 புறநானூறு 345

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

திணை: காஞ்சி

துறை: மகட்பாற் காஞ்சி.

பாடியது: அடைநெடுங் கல்வியார் 


பாடல்:- 


களிறு அணைப்பக் கலங்கினகாஅ,

தேர் ஓடத் துகள் கெழுமினதெருவு;

மா மறுகலின் மயக்குற்றனவழி;

கலம் கழாஅலின்துறை கலக்குற்றன;

தெறல் மறவர் இறை கூர்தலின்,            5

பொறை மலிந்து நிலன் நெளிய,

வந்தோர் பலரேவம்ப வேந்தர்,

பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்

ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,

கருங் கண் கொண்ட நெருங்கல் வெம்முலை,          10

மையல் நோக்கின்தையலை நயந்தோர்

அளியர் தாமேஇவள் தன்னைமாரே

செல்வம் வேண்டார்செருப் புகல் வேண்டி,

'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்என;

கழிப் பிணிப் பலகையர்கதுவாய் வாளர்,       15

குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு

கழாஅத் தலையர்கருங் கடை நெடு வேல்

இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ!

என் ஆவது கொல் தானே

பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!  20


விளக்கம்:-


வேந்தர்கள் அவளை விரும்புகின்றனர். அவளது தந்தை வேந்தர் தரும் செல்வத்தை விரும்பவில்லை. தனக்கு நிகரான போராளிக்குத் தன் மகளை மணம் முடித்துத் தரவே விரும்புகிறான். எனவே போர் மூண்டுள்ளது. பனைமரக் கருக்குமட்டை வேலி [பன் நல் வேலி] கொண்ட அவள் ஊர் என்ன ஆகுமோ?


படையுடன் வந்திருக்கும் புதியவர்கள் பலர்.

  • போர்யானைகள் தழுவுவதால் காடே கலகலத்துப் போயிருக்கிறது.
  • படையெடுத்து வந்த தேர்கள் ஓடுவதால் தெருவெல்லாம் ஒரே புழுதி.
  • படையெடுத்து வந்த குதிரைகள் திரிவதால் எது வழி என்றே தெரியாத நிலை.
  • கறை படிந்த அவர்களின் படைக்கருவிகளைக் கழுவுவதால் துறைநீரே கலங்குகிறது.
  • அழிக்கும் மறவர் கூட்டம் ஒன்று திரள்வதால் தாங்க முடியாமல் நிலமே நெளிகிறது.
  • இப்படி வந்திருக்கின்றனர்.

அவள்

  • எல்லாரும் விரும்பும் கருமையான முகட்டுக்கண்ணுடன் நெருங்கி நிற்கும் முலை கொண்டவள்.
  • முலையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
  • இருபுறமும் வரையப்பட்டுள்ளது.
  • அது பூவோட்டம் [கண்ணி] காட்டும் ஓவியம்.
  • அவள் முலைக்குப் பாதுகாப்பாக வரையப்பட்ட ஓவியம்.
  • பெண்யானை பெருமூச்சு விடுவது போல வண்ணம் தெளித்து வரையப்பட்ட ஓவியம்.(spray) 
  • இரும்புக் கம்பியால் வரையப்பட்ட ஓவியம்.
  • அவளும் ஆசை கொட்டும் பார்வை கொண்டவள். [மையல் நோக்கு]
  • அவள் தையல். அழகெல்லாம் தைத்து வைக்கப்பட்ட பெண்.

இரக்கம்

  • அவளை வரும்பியவர்கள் இரக்கம் கொள்ளத்தக்கவராக ஆகிவிட்டனர்.
  • காரணம் அவளது தந்தையும், அண்ணனும்.

இவள் அண்ணனும், தந்தையும்

  • மணம் செய்துகொள்ள வந்தவர் தரும்செல்வத்தை விரும்பவில்லை.
  • போரில் மோத விரும்புகின்றனர்.
  • “போரில் எங்களுக்கு நிகராக நிற்கமுடியாதவருக்குப் பெண் தரமாட்டேன்”என்று சொல்லிக்கொண்டு போரில்இறங்கியுள்ளனர்.
  • பலகை என்னும் கவசத்தை அவிழ்க்கக்கூடிய கழிபிணி முடிச்சுப் போட்டுக்கட்டிக்கொண்டுள்ளனர்.
  • வெட்டி வீழ்த்தக்கூடிய வாளைக் கையில்ஏந்திக்கொண்டுள்ளனர்.
  • குழுவாகத் திரண்டுள்ளனர். [குழாம்]
  • போரிட்டபோது குருதி படிந்த தலையைக்கழுவாமல் அடுத்த போருக்காகக்காத்திருப்பவர்கள்.
  • சிலரது கைகளில் கழுவாமல் கறை படிந்தகருநிற வேலும் இருக்கிறது.
  • இப்படிப்பட்ட மறவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஊர் என்ன ஆகுமோ?



கழிப்பிணி முடிச்சு அவர்கள் தம் கவசத்தை இந்தக் கழிப்பிணி முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொண்டனர
கழிப்பிணி முடிச்சு அவர்கள் தம் கவசத்தை இந்தக் கழிப்பிணி முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொண்டனர்

காவல் கண்ணி ஓவு (ஓவியம்)
அவளுக்கு இரண்டிலும் 
வரையப்பட்டிருந்தது



                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




OLDEST CAVE PAINTING

OLDEST CAVE PAINTING FOUND IN SULAWESI, INDONESIA.



                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


தொல்காப்பியத்தில் கற்பியல்

 தொல்காப்பியத்தில் கற்பியல்:





   "கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் 
    மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
    விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
    பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'       (1098)


விளக்கம்:- கற்பு எனும் மனத்திண்மை, தலைவன் மீது கொண்ட காதல், நல்லொழுக்கம், பொறுமை எனும் பெருங்குணம், நற்பண்புகளின் நிறை, விருந்தினரைப் பேணிக் காக்கும் தன்மை, சுற்றத்தாரை ஓம்பல் முதலானவை குடும்பத் தலைவியின் பண்புகளாகக் கூறுகின்றார் கற்பியலில் தொல்காப்பியர். 


"தற்புகழ்க் கிளவி கிழவன் முன் கிளத்தல் / எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை' (1126)


விளக்கம்:- தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரை பற்றியும் வியந்து தலைவன் முன் புகழ்ந்து பேசும் எச்சூழலிலும் தலைவிக்கு இல்லாததொரு பண்பாக எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. 


"செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான' (தொல்.1154) 


விளக்கம்:- அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை உரைக்கும் சொல்வன்மை, நன்மை, தீமையைப் பிரித்தாராயும் அறிவு, அரும் பண்புகள் ஆகியவை பெண்டிரின் குணநலன்களாகத் தொல்காப்பியம் கூறுகின்றது.



                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏