இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்

 


பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். 

இலக்கற்ற பயணி வாசிப்பதன் மூலம் நாம் இந்த உலகை, மனிதர்களை, கலை இலக்கியங்களின் முக்கியத்துவத்தை, வாழ்க்கையின் அழகியலை, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துளியென்றும் உணர முடியும். 


நாம் அறியப்படாத செய்திகளும் அறிய வேண்டிய செய்திகளும் பரவி கிடக்கின்றன. அதில் ஒன்று, 

         👉 " கனாடவின் துருவப்பகுதியில் உள்ள பூர்வகுடிகளை Inuit என்று அழைக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் பகுதி First Nation என்று குறிப்பிடுகிறது. எஸ்கிமோ என்று நாம் குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்தச் சொல் அங்கே தவறானது என்று விலக்கப்பட்டிருக்கிறது. காரணம், எஸ்கிமோ (Eskimo) என்பதற்கு பச்சை மாமிசம் உண்பவர்கள் என்று பொருள் , ஆகவே அது பூர்வகுடிகளை இழிவுபடுத்தும்சொல் என்று கனடாவாசிகள் அதைப் பயன்படுத்துவதில்லை ". 

          👉 “வரலாற்றை உருவாக்குவது மனிதர்களின் சாதுர்யங்களில் ஒன்று. அதன்வழியே கேள்விகேட்பதும், உண்மையை விசாரிப்பதும் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. ஆகவே, வரலாற்றைத் தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளவும், திருத்திக்கொள்ளவுமே அதிகாரம் ஆசைப்படுகிறது.”

         👉 வெரியர் எல்வினே (Verrier Edwin) வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய “எல்வினின் காலடிகள்” என்ற தலைப்பு மற்றும் “ரிவேரா ஓவியங்கள்” (Diego Rivera) என்ற தலைப்பும் தனிச்சிறப்பானது.  

         👉 “கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள்” என்ற தலைப்பில்….. சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைத் தேடிப்போய் காணும்போது மனதில் இனம் புரியாத ஏதோவொரு சந்தோஷம் உண்டாகிறது. சங்க இலக்கியத்தின் கபிலர் தனிப்பெரும் ஆளுமை கொண்ட கவி…. மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே”

           👉 “நயாகரா முன்னால்” என்ற தலைப்பில்….. அருவியைப் பற்றி how big they are and how small I am என்றொரு வசனம் இடம் பெறும், அந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதை நயாகராவின் முன்னால் நின்றபோது முழுமையாக உணர்ந்தேன்.

                             - எஸ். ராமகிருஷ்ணன்


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


புனலாட்டுப் பத்து

ஐங்குறுநூறு

புனலாட்டுப் பத்து

பாடியவர்:- ஓரம்போகியார்


பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக் குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது


விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே

பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்

கரைசேர் மருதம் ஏறிப்

பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே” . . . .[074]


பொருளுரை:


கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி அவள் நீரில் பாய்ந்தாள். அது வானத்திலிருந்து மயில் இறங்குவது போல இருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயில் தோகையையும், கோகைக்கண்களையும் போல விளங்கின


                      🙏🙏🙏🙏🙏🙏🙏

பழுவேட்டரையர் தேடி - பயணக் கட்டுரை

 கீழையூர்மேலப்பழுவூர்கீழப்பழுவூர்:-  



    இந்த கிராமத்தின் பழைய பெயர் மன்னுபெரும்பழுவூர் என இருந்ததுசோழ மன்னர்களுக்கும் “பழுவேட்டரைய” அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததுமுதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச்சான்றுகளுடன் அறிய முடிகிறதுபழுவேட்டரைய அரசர்கள் ஆட்சி செய்த ஊர் “பழுவூர்”.










கல்வெட்டுகள்:- 

** முதலாம் ராஜராஜ சோழனது காலத்தில் அவருடைய தேவியும்பழுவேட்டரையர் மகளுமான நக்கன் பஞ்சவன்மாதேவி வேண்டுகோளுக்கிணங்கிநெல் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது

** இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது ஆதித்த சோழனது கல்வெட்டுகள்இதில் இடம்பெற்றுள்ள பழுவூர்மரபின் முதல் இரு மன்னர்களான குமரன் கண்டனையும்குமரன் மறவனும் இக்கோயில் எடுப்பிக்க காரணமாகஇருந்தவர்கள்

** பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில்காணப்படுகின்றன


இந்தப் கல்வெட்டுகளை காலவரிசைப்படி கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக்கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.


1. குமரன் கண்டன்

2. குமரன் மறவன்

3. கண்டன் அமுதன்

4. மறவன் கண்டன்

5. கண்டன் சத்ருபயங்கரன்

6. கண்டன் சுந்தரசோழன்

7. கண்டன் மறவன்


IMG_2459.jpeg


மூத்த சகோதரர்கள் குமரன் கண்டன்குமரன் மறவன் சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். 'பெரியபழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரைய்ராகவும்’ இருக்காலம்



சாக்கை கூத்து:-

** கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் கூத்துக் கல்வெட்டு உள்ளன.

**தமிழ்நாட்டின் “சாக்கைக் கூத்துக்கான” ஆரம்பகால கல்வெட்டுக் குறிப்பு (கி.பி. 979) கீழ்பழுவூரில் உள்ள  ஆலந்துறையார் கோவிலில் உள்ளது


காமரசவல்லி கல்வெட்டு:- 

**சுந்தரசோழனால் (கி.பி.957-974) அவன் ஆட்சி காலத்தில் கி.பி.962ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகுறிப்பிடுகின்றது.

**சக்கைக் கூத்து நடத்திபொன்னும் நிலமும் பரிசாகப் பெற்றார்சாக்கை மாராயன் விக்ரமசோழன் காமரசவல்லிகோயிலில் மூன்று நாட்கள் சக்கைக் கூத்தை நிகழ்த்தியதாக முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு (1041CE) மூலம் அறிகிறோம்


                          🙏🙏🙏🙏🙏🙏🙏