தமிழி் கல்வெட்டு் - மதுரை



 தமிழி் கல்வெட்டு் - மதுரை பயணத்தில் 

👉 மாங்குளம்
 
👉 அரிட்டாபட்டி
 
👉 கருங்காலக்குடி் மற்றும் 
 
👉 கீழவளவு  
ஆகிய இடங்களில் உள்ள தமிழி கல்வெட்டுகளை பார்வையிட்டோம் ❤️❤️❤️


மாங்குளம்:-  


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ளது மாங்குளம்இங்குள்ள கிமு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி” கல்வெட்டுக்கள் 1882ல் ராபர்ட் சீவல் (Robert_Sewellஎன்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுமாங்குளத்தில் மொத்தம் 6 தமிழி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.





👉 தமிழி கல்வெட்டு் 1:-

   𑀓𑀡𑀺𑀬𑁆       𑀦𑀢𑁆𑀢𑀺𑀬𑁆         𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑁆           𑀅𑀯𑀷𑁆

“கணிய் நந்திய் கொடிய் அவன்”

விளக்கம்:-

          (பின்வரும் நீண்ட கல்வெட்டை 2) “கணி நத்தி” என்பவன் பொறித்துக் கொடுத்துள்ளான்.




  

👉தமிழி கல்வெட்டு 2:-

     கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்

       இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்

       வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

விளக்கம்:

      கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின்” அலுவலனாக விளங்கிய கடலன் வழுதி என்பவன் இப்பள்ளியை (கற்படுக்கையைஉருவாக்கிக் கொடுத்தான்.



𑀓𑀡𑀺𑀬𑁆(கணிய்) 𑀦𑀦𑁆𑀢𑀸 (நந்த) 𑀅𑀲𑀭𑀺𑀬𑁆𑀇 (அஸரிய்இ) 𑀓𑀼𑀯𑁆 (குவ்) 𑀅𑀷𑁆𑀓𑁂 (அன்கே) 𑀢𑀫𑁆𑀫𑀫𑁆 (தம்மம்) 𑀇𑀢𑁆𑀢𑀸𑀅 (இத்தாஅ) 𑀦𑁂𑁆𑀝𑀼𑀜𑁆𑀘𑀵𑀺𑀬𑀷𑁆 (நெடுஞ்சழியன்) 𑀧𑀡𑀅𑀷𑁆 (பணஅன்) 𑀓𑀝𑀮𑁆𑀅𑀷𑁆 (கடல்அன்) 𑀯𑀵𑀼𑀢𑁆𑀢𑀺𑀬𑁆 (வழுத்திய்) 𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀼𑀧𑀺𑀢𑁆𑀢𑀅 (கொட்டுபித்தஅ ) 𑀧𑀴𑀺𑀇𑀬𑁆 (பளிஇய்)



👉தமிழி கல்வெட்டு 3:-

                         சந்திரிதன் கொடுபித்தோன்

விளக்கம்:

     இந்த உறைவிடத்தை சந்தரிதன் என்பவன் அமைத்துக் கொடுத்தான்





👉தமிழி கல்வெட்டு 4:-

                       வெள்அறை நிகமதோர் கொடிஓர்

விளக்கம்:-      இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள “வணிகக் குழுக்கள்” ஆவர்.


👉 தமிழி கல்வெட்டு 5:-

      கணிஇ நதஸிரிய் குவ…. வெள் அறைய் நிகமது காவிதிஇய்

     காழிதிக அந்தை அஸூதன் பிணஉ கொடுபிதோன்

விளக்கம்:-

 கணி நந்தஶ்ரீ குவ(ன்என்பவருக்கு வெள்ளறை என்ற கிராமத்தைச் சார்ந்த உழவு சம்பந்தமான வணிகம் செய்யும்காழிதிக அந்தை அஸூதன் இந்த உறைவிடத்தை அமைத்துக் கொடுத்தான்




👉தமிழி கல்வெட்டு 6:-

     கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்

ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

விளக்கம்:-

கணி நந்தஶ்ரீ குவன் என்பவருக்கு நெடுஞ்செழியனின் சகலையான இளஞ்சடிகன் என்பவனின் தந்தை சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (உறைவிடத்தைஅமைத்துக் கொடுத்தான்.


அரிட்டாபட்டி:-


 சமண தீர்த்தங்கரர்களில் 22வது தீர்த்தங்கரரான “நேமிநாதர்” என்பவருக்கு “அரிட்டநேமி” என்ற பெயர் இருந்ததனால் ‘அரிட்டாபட்டி’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்


அரிட்டாபட்டியில்

👉 கி.மு 3-2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த “தமிழி” கல்வெட்டுகள் உள்ளன


👉 தமிழி கல்வெட்டு:-

    1. “நெல்வெளி இயசிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதொன்

    2. “இலஞ்கிய எளம்பேராதன் மகன் எமயவன் இவ்முழுஉகை கொடுபிதவன்


விளக்கம்:-          1. திருநெல்வேலியைச் சேர்ந்த செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த சமணப்பள்ளி

  2. இலஞ்சியைச் சேர்ந்த இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை.

என்று கி.மு 3-2ஆம் நூற்றாண்டின் “தமிழி” கல்வெட்டு கூறுகிறது


👉 சமண புடைப்பு சிற்றங்கள் உள்ளன

👉 கிபி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் மற்றும் குடைவரை கோவில்களும் உள்ளது.

👉கிபி 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘வட்டேழுத்து’ கல்வெட்டுகள் உள்ளன

👉 அரிட்டாபட்டி பகுதி தற்போது தமிழ்நாட்டின் “முதல் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக” Nov’22யில் தமிழக அரசுஅறிவித்துள்ளது.❤️🙏


கருங்காலக்குடி:-

              மதுரை திருச்சி புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஊர் கருங்காலக்குடிஇங்குள்ள “தமிழி” கல்வெட்டு கி.பி. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது


👉>5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும்

👉 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும்

👉 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடிதொன்மையின் சின்னமாக விளங்குகிறது.

👉தமிழி கல்வெட்டு:-

      ஏழையூர் அரிதின் பளிய்

விளக்கம்:

        ஏழையூர் எனும் ஊரைச்சேர்ந்த அரிதி என்பவர் இப்பள்ளியை அமைத்துக் கொடுத்தவர் என்பது இதன்பொருளாகும்.

👉 பாறையின் மற்றொரு பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த “பாறை ஓவியங்களும்” கண்டறியப்பட்டுள்ளன.









கீழவளவு:-

        மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கீழவளவு எனும் ஊர் அமைந்துள்ளது

👉 இங்கு கிமு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுக்களையும் 

👉 கி.பி 9- 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பங்களையும் உள்ளன.


தமிழி கல்வெட்டு:-

        உப(அன் தொண்டி(வோன் கொடு பளிஇ

விளக்கம்:

         உபாசன் தொண்டி இலவோன் கொடுத்த பள்ளி என்பது இக்கல்வெட்டின் பொருள்இடவலமாக வெட்டப்பட்டகல்வெட்டு.





                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston,1855-1935)

 எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston,1855-1935)





👌 எட்கர் தர்ஸ்டன் -1885 இல் சென்னை அருங்காட்சியகக் கண்காணிப்பாளராகப் பணியேற்று கால்நூற்றாண்டுக் காலம் அப்பணியை செவ்வனே மேற்கொண்டவர்இப்பொறுப்புடன் 1901இல் தென்னிந்திய இனவியல்(Ethnology) ஆய்வுப் பொறுப்பும் ஆங்கில அரசால் இவரிடம் கொடுக்கப்பட்டதுவங்காளத்தில் உள்ள ஆசியக்கழகத்தினரிடம் இருந்து மனித உடற்கூற்றினை அளக்க உதவும் கருவிகளைப் பெற்று அவர் இந்த ஆய்வினை முன்னெடுத்தார்.


👌👉 தர்ஸ்டன் தனது ஆய்வை ‘Castes and Tribes of South India’ என்ற தலைப்பில் 7 தொகுதிகளாக 1909இல்வெளியிட்டார்மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியினர் உட்பட 300க்கும் மேற்பட்ட குலங்களையும் குடிகளையும் கொண்ட தகவல் களஞ்சியம் இந்த நூல்கள்இவை வரலாற்றியல்சமூகவியல்இனவியல் நோக்கில் குடிகளையும் குலங்களையும் அறிய உதவும் தகவல்கள் நிரம்பியவை.சி.கந்தையா பிள்ளை இவற்றின் சிலபகுதிகளைச் சுருக்கி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளார்.


👌👉 மானிடவியல் ஆய்வாளர்களுக்கு மிக இன்றியமையாததும்அடிப்படையுமான ஆய்வு நூல் என்பதால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 7 தொகுதிகள் கொண்ட இந்த ஆய்வு நூல் தொகுப்பை முனைவர் ரத்னம் அவர்களின் மொழி பெயர்ப்பில் 1986 முதல் 2005 வரை வெளியிட்டுள்ளதுதனி ஒரு மனிதராக மொழிபெயர்ப்பைக் கையாண்டு எளிதில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் 7 தொகுதிகளையும் தமிழாக்கம் செய்தது ரத்னம் அவர்களின் பாராட்டிற்குரிய செயல் என்று சொல்வது மிகையல்லபடிப்பவருக்கு அவரது பணியின் சிறப்பு விளங்கும்.





👌👉 தொகுதி – 1. அபிசேகர் முதல் பயகர வரை

தொகுதி – 2. கஞ்சி முதல் ஜுங்கு வரை

தொகுதி – 3. கப்பேரர் முதல் குறவர் வரை

தொகுதி – 4. கோரி முதல் மரக்காலு வரை

தொகுதி – 5.மரக்காயர் முதல் பள்ளெ வரை

தொகுதி – 6. பள்ளி முதல் சிரியன் கிறிஸ்துவர் வரை

தொகுதி – 7. தாபேலு முதல் சொன்னல வரை


👌👉 “திராவிடக் குடும்பத்திற்குரிய பண்டைய பெயர் ‘தமிழ்’ என்பதனை மனதிற் கொள்ளவேண்டும்திராவிடம் என்ற சொல்லாட்சியினைக் கால்டுவெல் பயன்படுத்தியதற்குக் காரணம் தமிழ் என்ற சொல்லாட்சி தமிழ் மொழிக்கு உரியவர்களின் மொழிக்காகத் தனித்து ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினாலேயே ஆம்” என்பது தர்ஸ்டன் தரும் விளக்கம்.


👌👉 இன்று தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் என்ற அளவில் குறுகிவிட்ட திராவிட இனம்முன்னர் இந்தியா முழுவதிலும் அதற்கு அப்பாலும் கூடப் பரவியிருந்ததாகத் தெரிகிறது


Castes and Tribes of South India: Edgar Thurston

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்எட்கர் தர்ஸ்டன்

(தமிழாக்கம்முனைவர் ரத்னம்)