அட்சய திருதியும் சமணமும்

முதற் சமண தீர்த்தங்கரர் ரிசபதாதர் கருப்புச் சாறு பெறும் காட்சி


 ஆதிபகவன்

நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார்.
இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக
மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக
மரத்தை நாடி வேண்டியதைப் பெற்று வாழலானார்கள்.

கர்ம பூமி

இவ்வாறாக மக்கள் எந்த உழைப்புமின்றி வாழ்ந்தக் காலத்தில் கற்பக மரங்கள் மறையத் தொடங்கின. இதனால், மக்கள் செய்வதறியாது, தங்களின் அரசனான ஆதிபகவனை அணுகி, தங்களுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டனர். பகவானும் அவர்கள் நிலையுணர்ந்து ஆறு தொழில்களை கற்பித்தார். இதனால், அவர் யுகாதி நாதர் என்று அழைக்கப்படலானார். ஆறு தொழிற்களை கற்பித்த அந்த நன்னாள் யுகாதி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாட்டில் தோன்றிய எல்லா சமண இலக்கியங்களிலும் இச்செய்தியைக் காணலாம். தமிழில் தோன்றிய சமண இலக்கியங்களும் இதனை கூறுகின்றன. சீவக சிந்தாமணி, சூடாமணி நிகண்டு, திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூட்களில் இச்செய்தி வருவதைக் காணலாம்.

விரிவஞ்சி, எடுத்துக்காட்டாக ஒன்றை ஈண்டு சுட்டுகிறேன்.

“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
– ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

துறவறம்

இவ்வாறாக உலக மக்களுக்கு முதன்முதல் ஆறு தொழில்களைக் கற்பித்ததால், இவருக்கு ஆதிபிரம்மா, யுகாதிநாதன், பிரஜாபதி, ஆதிதேவன், ஆதிநாதர், ஆதிராஜர், ஆதிபகவன், ஆதிசக்கரவர்த்தி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படலானார்.

குறளாசிரியர் தேவர் பெருமானும், இதனைக் குறிக்கவே முதல் குறளாக,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளினை அமைத்தமை இங்கு சிந்திதற்பாலது.

இல்லறத்தில் இன்பம் துய்த்து, சிறப்புற அரசாட்சி செய்து
வருங்கால், ஒரு நாள் அரண்மனையில், “நீலாஞ்சனை” என்னும் நாட்டிய பெண்ணின் நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது. அரங்கேற்றத்தின் பாதியிலேயே அப்பெண் அகால மரணம் அடைகிறாள். இதனால் அதிர்ச்சியுற்ற ஆதிராசருக்கு அக்கணமே
வைராக்கியம் ஏற்படுகிறது. தன் முதல் மகனான பரதனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு, அரச வாழ்வைத் துறந்து துறவேற்கிறார்.

ஆகார தானம்

அவ்வாறு அரச வாழ்வைத் துறந்த விருஷபதேவர், நாட்டை விட்டு அகன்று காட்டில் வாழலானார். மெளனம் ஏற்றார். தொடர்ந்து ஆறு மாதங்கள் நின்ற வண்ணமே (கயோத்சர்கம்) தவம் ஏற்றலானார். ஆறு மாதங்கள் கழிந்தப் பிறகு ஆகாரம்
ஏற்க (பாராணை விதி) நாட்டுக்கு வருகிறார். மக்கள், இதற்கு முன்னர் துறவியர்களைக் கண்டதில்லையாதலால், ரிஷபநாதரை
இன்னும் அரசராகவே கருதி அவருக்கு தங்களிடம் உள்ள
விலை உயர்ந்த பொருட்களை அளிக்க முன்வந்தனர். இதனால்,
மீண்டும் தவத்தினைத் தொடரலானார். இவ்வாறாக மேலும் ஆறு மாதங்கள் கழியலாயின.

தான தீர்த்தங்கரர்

இங்கு ஒன்றைக் குறிப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதாவது, சமண துறவிகள் பாராணை செல்லும்போது எந்த இல்லறத்தான் வீட்டின் முன்பும் நிற்க மாட்டார்கள். அதுபோல் யாரிடமும் பேசவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் வழியேச் செல்வார்கள். அத்துறவிகளைக் கண்ட இல்லறத்தான் தானே முன்வந்து அவர்களுக்கு ஆகாரத் தானம் கொடுக்க வேண்டுமேயன்றி துறவிகள் தாமாக யாரிடமும் சென்று உண்ண கூடாது என்பது சமணத் துறவிகளின் விதி. ஆகாரம் ஏற்கும்போது, நின்று கொண்டு தன் இருகைகளால்தான் உணவு ஏற்கவேண்டும். பாத்திரம் ஏதும் உபயோகப்படுத்தக் கூடாது.

அவ்விதியின்படி, மீண்டும் பாராணை ஏற்க அஸ்தினாபுரம் வருகிறார் விருடபதேவர். அச்சமயம், அந்நாட்டின் இளவரசனான, சிரேயாம்ச குமாரனுக்கு தான் முற்பிறவியில் துறவிகளுக்கு ஆகார தானம் கொடுத்த நினைவு ஏற்பட்டு, பாராணைக்காக வந்த விருஷபசுவாமிக்கு “கரும்பு சாற்றினை” அளிக்கிறான். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இளவரசன் சிரேயாம்ச குமாரன் பகவானுக்கு ஆகார தானம் அளித்ததால் “தான தீர்த்தங்கரர்” எனப் போற்றப்பட்டார்.

தான பூஜை

ஆதிபகவன் பாராணை மேற்கொண்டதை தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரனும், இதர தேவர்களும் பெருமகிழ்ச்சியடைந்து, பஞ்சாச்சரியம் பொழிந்தனர். அப்பொழுது விழுந்த விலையுயர்ந்த இரத்தின, மாணிக்க கற்களை, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். சிரேயாம்ச குமாரன் ஆகாரதானம் அளித்த அந்த நன்நாளே அட்சய திருதியாகவும் ஆகாரதானம் போற்றும் நாளாகவும் போற்றப்படுகிறது.

அட்சயதிருதியை

அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன விருந்தோம்பலைக் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.

தானம் போற்றுவோம்

பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து “அட்சயதிருதியை” கொண்டாடுங்கள்.

– இரா. பானுகுமார், சென்னை

Credit :- https://jainism.tamilheritage.org/அட்சய-திருதியை/?fbclid=IwAR0sLXdxVE4VdZgmjEUIqR4SOYAN_2-6r4WfjRPozyCz_AbEVGaZ2Rqxsws


அக்கீமெனிட் பேரரசு (achaemenid empire) - கிமு 550-330

அக்கீமெனிட் பேரரசு (achaemenid empire) - கிமு 550-330


முதல் பாரசிக பேரரசுஇப்பேரரசு “சைரசு” என்பவரால் நிறுவப்பட்டது. இது ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.


பாரசிக மன்னன் சைரஸ்



சைரஸ்சின் நினைவிடம்


முதல் பாரசீகப் பேரரசு என்றும் அழைக்கப்படும் அச்செமனிட் பேரரசு, மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு பாரசீகப் பேரரசு ஆகும். இது கிமு 6 ஆம் நூற்றாண்டில் “சைரஸ் தி கிரேட்” நிறுவப்பட்டது, அவர் மீடியன் கூட்டமைப்பை அகற்றினார். கிமு 705 மற்றும் கிமு 675 க்கு இடையில் பெர்சியாவை ஆட்சி செய்த மன்னர் அச்செமெனெஸ் (Achaemenes) என்பவரிடமிருந்து இந்த வம்சம் அதன் பெயரைப் பெற்றது. 




கிமு 500 இல் கிழக்கில் சிந்து பள்ளத்தாக்கு முதல் கிரேக்கத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள திரேஸ் மற்றும்மாசிடோன் வரை பரவியிருந்த பண்டைய உலகின் குறிப்பிடத்தக்க பகுதிகளை இறுதியில் ஆட்சி செய்ய பேரரசுவிரிவடைந்ததுஇது உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரரசாக மாற்றியது



இறவாப்படை:

பண்டைய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசால் குறிப்பிடும் இறவாப்படை என்பது அகாமனியப் பேரரசின்இராணுவத்தில் 10,000 வீரர்களைக் கொண்ட உயரடுக்கு கனரக காலாட்படை பிரிவுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும்பாரசீகப் பேரரசின் தொழில்முறை இராணுவமாக இருந்ததுடன்பேரரசின் காவலராக பங்களித்து இரட்டைத்திறன்களில் பணியாற்றியதுஇது முதன்மையாக பாரசீகர்களைக் கொண்டிருந்தாலும்இறவாப்படையில் மீடியர் மற்றும்ஈலாம்களும் அடங்குவர்.



அக்கீமெனிட் விழச்சி:


கிமு 330 ஆம் ஆண்டில் அகாமன்சியப் பேரரசுபேரரசன் அலெக்சாந்தரால் (Alexander the great) தோற்கடிக்கப்பட்டது


பார்த்தியா பேரரசு:  


முதலாம் அர்செஸ் (Arsaces Iபாரசீகத்தில் பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்இவர் பார்த்தியப்பேரரசை கிமு 247 முதல் கிமு 217 முடிய 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர்இவர் கிரேக்க செலூக்கிய பேரரசைஎதிர்த்து போரிட்டுபாரசீகத்தின் வடக்குப் பகுதிகளை கைப்பற்றிபார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர்.


                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏







மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி

 மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி



மயிலை சீனிவேங்கடசாமி தமிழறிஞரும்எழுத்தாளருமாவார்தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களைஎழுதியவர்அவர் எழுதிய மகேந்திரவர்மன் என்ற நூலில் இருந்து சில தேன்துளிகள்


👉 மகேந்திரனின் தந்தையாரான “சிம்மவிஷ்ணு” கிபி 550 - 590 வரை ஆட்சி புரிந்தார். அப்பொழுது பல்லவ இராசியமானது வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே புதுக்கேட்டை வரை பரவியிருந்தது. அஃதாவது ஆந்திர நாடு, தொண்டைமண்டலம், சோழமண்டலம் ஆகிய மூன்று நாடுகளை கொண்டது. 




👉 மகேந்திரவர்மன் 590-630 வரை ஆட்சி செய்தான்இவனது காலத்தில் பல்லவ தேசத்தின் வடக்கு எல்லைகுறைந்துவிட்டது. “வாதாபியை தலைதகரமாக கொண்டு ஆட்சி புரிந்த சாளுக்கிய மன்னன் “இரண்டாம் புலிகேசி” ஆந்திர நாட்டை கைப்பற்றினான்காஞ்சிபுரத்தில் வடக்கே 15 மைல் தொலைவில் புள்ளலூர் என்ற ஊரில் நடந்தபோரில் மகேந்திரவர்மன் காஞ்சியை தற்காத்துக்கொண்டான்புலிகேசி அவனது தம்பியான “விஷ்ணுவர்தனை” ஆந்திரநாட்டுக்கு தளபதியாக்கி சென்றான்பின்நாளில் விஷ்ணுவர்தன் சுயாட்சி அறிவித்து “கீழை சாளுக்கிய” வம்சத்தை உருவாக்கினான்இந்த அரசு கிபி 1130 வரை 500 ஆண்டுகளுக்கு இருந்ததுபின்பு இது சோழப்பேரரசுடன் இணைந்ததுவேங்கி அரசை கீழைச் சாளுக்கியர்களே சோழர்களின் பாதுகாப்புடன் கிபி 1189 வரைஆண்டனர்


👉 இதனால்மகேந்திரவர்மன் ஆட்சி எல்லையானது வடபெண்ணை ஆற்றங்கரையில் இருந்து புதுக்கோட்டை வரைஇருந்தது


👉 பல்லவன் காஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தான்கடல்மல்லை என்ற ஊர் துரைமுகமாக இருந்ததுகடல்மல்லை/மல்லை தான் இப்பொழுது மகாபலிபுரம் என்று அழைக்கப்படுகிறது.

தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் கடல்மல்லை தொண்டைநாட்டுப் துரைமுகப்பட்டினமாக இருந்தது


👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் ஹர்ஷவர்த்தனன் மற்றும் இரண்டாம் புலிகேசி வடஇந்தியா மற்றும் தென்இந்நியாவை ஆட்சி செய்தனர்.

ஹர்ஷவர்த்தனன் (590–646) வடஇந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு வடஇந்தியப் பேரரசர்ஹர்சரின்தலைநகர் கன்னோசிஇரண்டாம் புலிகேசி (கிபி 610 - 642) சாளுக்கிய மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னனாவான்

ஹர்ஷவர்த்தனன் மற்றும் இரண்டாம் புலிகேசிக்கும் கிபி 620யில் நர்மதா நதிக்கரையில் போர் மூண்டது. இதில் புலிகேசி ஹர்ஷவர்த்தனின் ஆட்சி தெற்கில் பரவாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.


👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டியநாட்டை அரசாண்ட மன்னன் சேந்தன். இந்த சேந்தன், பாண்டியன் மாறவர்மனுடய மகன், கடுங்கோனுடைய பேரன். 


👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் சமயநிலைமகேந்திரவர்மனே சமண சமயத்தை சார்ந்தவனாக இருந்தான்திருநாவுக்கரசர் இவனை சைவசமயத்தில் சேர்த்தார்திருநாவுக்கரசரே சமண சமயத்தில்தான் இருந்தார்ஆவர் சமணசமயத் தலைவராக இருந்தபோது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். அவருடைய சூலைநோய் குணமாவதற்காக சைவசமயம் மாறினார். சமணம்பௌத்தம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் சிறப்பாக இருந்தனபக்தி இயக்கத்தால் பல்லவனும், பாண்டியனும் சையத்திற்கு மாறினர்.


👉 முகம்மது நபி:- கிபி 569இல் பிறந்தார். தமது 40வது வயதில் கடவுளின் திருவருள் கிடைக்கப்பெற்றார். அவர் இஸ்லாம் மத்த்தின் மதகுருவாகவும் அரசியல் தலைவராகவும் விளங்கினார். இவரது காலத்தில் இஸ்லாம் அரபு நாடு முழுவதும் பரவியது. இவர் கிபி 632 ஆம் ஆண்டில் காலமானார்.


👉சங்கக் காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியதுமறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்


👉7ஆம் நூற்றாண்டில்  தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப்  பல்லவன் சிறந்த ஓவியன்கல்வெட்டுகள் இவனைச் “சித்திரகாரப்புலி” எனப்புகழ்கின்றன தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.


👉 மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்கள்:- குணபரன்மத்தவிலாசன்சித்திரகார புலிசங்கீரண கதிசத்ருமல்லன்அவனிபாஜன் முதலியன





👉 “பல்லவபுரம்” என்னும் பெயருள்ள மூன்று இடங்கள் பல்லவ அரசகுடும்பத்தினர் வாழ்ந்துவந்தனர். 1. பல்லாவரம்(சென்னை) 2. பல்லாவரம் (காஞ்சி 3. பல்லாபுரம் (திருச்சி


👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் கட்டிய குடைவரை கோயில்கள்:-

  1. திருச்சிராப்பள்ளி குடைவரை கோயில்
  2. பல்லாவரத்துக் குடைவரை கோயில்
  3. வல்லம் குடைவரை கோயில்
  4. மண்டகப்பட்டு
  5. தளவானூர்
  6. மகேந்திரவாடி
  7. மாமண்டூர்
  8. மேலைச்சேரி
  9. சித்தன்னவாசல்
  10. சீயமங்கலம்
  11. குரங்கணின் முட்டம்
  12. சிங்கவரம்
  13. திருக்கழுக்குன்றம்
  14. திருக்கோகர்ணம்
  15. மகாபலிபுரம் 

👉மகேந்திரவர்மன் இயற்றிய “மத்தவிலாச நாடகம்” இந்த நூலின் ஆசிரியர் தமிழில் வழங்கியிருக்கிறார்வரலாற்றுஆர்வலர்கள் அதை கண்டிப்பாக வாசிக்கவேண்டும்


👉ஆரியமும் தமிழும்:- வைதிகப் பிராமணராகிய ஆரியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில்வந்திருந்தனர்ஆனால் திராவிடப் பண்புடன் கலக்காமல் நெடுங்காலம் தனித்து இருந்து வந்தனர்ஆதியில் வைதீகப்பிராமணர் இலிங்க வழிபாம்டையும்திருமால் வணக்கத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தனர்சமணபௌத்தசமயத்தின் தாக்கத்தால்வைதிக பிராமணர்கள் திராவிடக் கடவுள்களை ஏற்றுக்கொண்டனர்திருநாவுக்கரசர் இந்ததிராவிட-ஆரிய சமயப் கலப்பை தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்

  ஆரி யந்தமி ழோடிசை யானவன்

    ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்


                     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏