குறுந்தொகைப் பாடல் எண்: 40


யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.



குறுந்தொகைப் பாடல்  எண்40 (நாற்பது)

ஆசிரியர்: செம்புலப் பெயனீரார்.

திணை - குறிஞ்சி 

என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்என் தந்தையும் நின்தந்தையும் எந்த முறையில் உறவினர்இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்இம்மூன்றும் இல்லையாகவும் செம்மண் நிலத்தின் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.

No comments:

Post a Comment